🔥 0 day streak
📖 Long surah — split into smaller parts to help you focus (49 வசனம்)
📚 All Surahs
30%
🎤 Tap the microphone icon 🎙️ next to any verse to record yourself reciting it, then listen back and compare with the reciter.
0/49
52:1 🔁 0/5
وَٱلطُّورِ  ۝١
Wat-Toor
தூர் (மலை) மீது சத்தியமாக!
🎤 Your recording:
52:2 🔁 0/5
وَكِتَٰبٍ مَّسۡطُورٍ  ۝٢
Wa kitaabim mastoor
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
🎤 Your recording:
52:3 🔁 0/5
فِي رَقٍّ مَّنشُورٍ  ۝٣
Fee raqqim manshoor
விரித்து வைக்கப்பட்ட,
🎤 Your recording:
52:4 🔁 0/5
وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ  ۝٤
Wal baitil ma`moor
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
🎤 Your recording:
52:5 🔁 0/5
وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ  ۝٥
Wassaqfil marfoo
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
🎤 Your recording:
52:6 🔁 0/5
وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ  ۝٦
Wal bahril masjoor
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
🎤 Your recording:
52:7 🔁 0/5
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ  ۝٧
Inna `azaaba Rabbika lawaaqi
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
🎤 Your recording:
52:8 🔁 0/5
مَّا لَهُۥ مِن دَافِعٍ  ۝٨
Maa lahoo min daafi
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
🎤 Your recording:
52:9 🔁 0/5
يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرًا  ۝٩
Yawma tamoorus samaaa`u mawraa
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
🎤 Your recording:
52:10 🔁 0/5
وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرًا  ۝١٠
Wa taseerul jibaalu sairaa
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
🎤 Your recording:
52:11 🔁 0/5
فَوَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١١
Fawailuny yawma `izil lil mukaazzibeen
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
🎤 Your recording:
52:12 🔁 0/5
ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٍ يَلۡعَبُونَ  ۝١٢
Allazeena hum fee khawdiny yal`aboon
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
🎤 Your recording:
52:13 🔁 0/5
يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا  ۝١٣
Yawma yuda`-`oona ilaa naari jahannama da`-`aa
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
🎤 Your recording:
52:14 🔁 0/5
هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ  ۝١٤
Haazihin naarul latee kuntum bihaa tukazziboon
அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
🎤 Your recording:
52:15 🔁 0/5
أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ  ۝١٥
Afasihrun haazaaaa am antum laa tubsiroon
"இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
🎤 Your recording:
52:16 🔁 0/5
ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ  ۝١٦
Islawhaa fasbirooo aw laa tasbiroo sawaaa`un `alaikum innamaa tujzawna maa kuntum ta`maloon
"நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."
🎤 Your recording:
52:17 🔁 0/5
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٍ وَنَعِيمٍ  ۝١٧
Innal muttaqeena fee jannaatinw wa na`eem
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
🎤 Your recording:
52:18 🔁 0/5
فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ  ۝١٨
Faakiheena bimaaa aataahum rabbuhum wa waqaahum rabbuhum `azaabal jaheem
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
🎤 Your recording:
52:19 🔁 0/5
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ  ۝١٩
Kuloo washraboo haneee `am bimaa kuntum ta`maloon
(அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."
🎤 Your recording:
52:20 🔁 0/5
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصۡفُوفَةٍۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٍ  ۝٢٠
Muttaki`eena `alaa sururim masfoofatinw wa zawwaj naahum bihoorin `een
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
🎤 Your recording:
52:21 🔁 0/5
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٍۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٌ  ۝٢١
Wallazeena aamanoo wattaba`at hum zurriyyatuhum bieemaanin alhaqnaa bihim zurriyyatahum wa maaa alatnaahum min `amalihim min shai`; kullum ri`im bimaa kasaba raheen
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
🎤 Your recording:
52:22 🔁 0/5
وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٍ وَلَحۡمٍ مِّمَّا يَشۡتَهُونَ  ۝٢٢
Wa amdadnaahum bifaa kihatinw wa lahmim mimmaa yashtahoon
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
🎤 Your recording:
52:23 🔁 0/5
يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسًا لَّا لَغۡوٌ فِيهَا وَلَا تَأۡثِيمٌ  ۝٢٣
Yatanaaza`oona feehaa kaasal laa laghwun feehaa wa laa taaseem
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
🎤 Your recording:
52:24 🔁 0/5
۞ وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٌ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٌ مَّكۡنُونٌ  ۝٢٤
Wa yatoofu `alaihim ghilmaanul lahum ka annahum lu`lu`um maknoon
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
🎤 Your recording:
52:25 🔁 0/5
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ يَتَسَآءَلُونَ  ۝٢٥
Wa aqbala ba`duhum `alaa ba`diny yatasaaa`aloon
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
🎤 Your recording:
52:26 🔁 0/5
قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ  ۝٢٦
Qaalooo innaa kunnaa qablu feee ahlinaa mushfiqeen
"இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
🎤 Your recording:
52:27 🔁 0/5
فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ  ۝٢٧
Famannnal laahu `alainaa wa waqaanaa `azaabas samoom
"ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
🎤 Your recording:
52:28 🔁 0/5
إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ  ۝٢٨
Innaa kunnaa min qablu nad`oohu innahoo huwal barrur raheem
"நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்."
🎤 Your recording:
52:29 🔁 0/5
فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجۡنُونٍ  ۝٢٩
Fazakkir famaaa anta bini`mati rabbika bikaahininw wa laa majnoon
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.
🎤 Your recording:
52:30 🔁 0/5
أَمۡ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ  ۝٣٠
Am yaqooloona shaa`irun natarabbasu bihee raibal manoon
அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?
🎤 Your recording:
52:31 🔁 0/5
قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ  ۝٣١
Qul tarabbasoo fa innee ma`akum minal mutarabbiseen
"நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
🎤 Your recording:
52:32 🔁 0/5
أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٌ طَاغُونَ  ۝٣٢
Am taamuruhum ahlaamuhum bihaazaaa am hum qawmun taaghoon
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
🎤 Your recording:
52:33 🔁 0/5
أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ  ۝٣٣
Am yaqooloona taqawwalah; bal laa yu`minoon
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
🎤 Your recording:
52:34 🔁 0/5
فَلۡيَأۡتُواْ بِحَدِيثٍ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ  ۝٣٤
Falyaatoo bihadeesim misliheee in kaanoo saadiqeen
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
🎤 Your recording:
52:35 🔁 0/5
أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ  ۝٣٥
Am khuliqoo min ghairi shai`in am humul khaaliqoon
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
🎤 Your recording:
52:36 🔁 0/5
أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ  ۝٣٦
Am khalaqus samaawaati wal ard; bal laa yooqinoon
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
🎤 Your recording:
52:37 🔁 0/5
أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ  ۝٣٧
Am`indahum khazaaa`inu rabbika am humul musaitiroon
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
🎤 Your recording:
52:38 🔁 0/5
أَمۡ لَهُمۡ سُلَّمٌ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٍ مُّبِينٍ  ۝٣٨
Am lahum sullamuny yastami`oona feehi falyaati mustami`uhum bisultaanim mubeen
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
🎤 Your recording:
52:39 🔁 0/5
أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ  ۝٣٩
Am lahul banaatu wa lakumul banoon
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
🎤 Your recording:
52:40 🔁 0/5
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرًا فَهُم مِّن مَّغۡرَمٍ مُّثۡقَلُونَ  ۝٤٠
Am tas`aluhum ajran fahum mim maghramim musqaloon
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
🎤 Your recording:
52:41 🔁 0/5
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ  ۝٤١
Am `indahumul ghaibu fahum yaktuboon
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
🎤 Your recording:
52:42 🔁 0/5
أَمۡ يُرِيدُونَ كَيۡدًاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ  ۝٤٢
Am yureedoona kaidan fallazeena kafaroo humul makeedoon
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
🎤 Your recording:
52:43 🔁 0/5
أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ  ۝٤٣
Am lahum ilaahun ghairul laa; subhaanal laahi `ammaa yushrikoon
அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
🎤 Your recording:
52:44 🔁 0/5
وَإِن يَرَوۡاْ كِسۡفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُواْ سَحَابٌ مَّرۡكُومٌ  ۝٤٤
Wa iny yaraw kisfam minas samaaa`i saaqitany yaqooloo sahaabum markoom
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
🎤 Your recording:
52:45 🔁 0/5
فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ  ۝٤٥
Fazarhum hatta yulaaqoo yawmahumul lazee feehi yus`aqoon
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
🎤 Your recording:
52:46 🔁 0/5
يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔا وَلَا هُمۡ يُنصَرُونَ  ۝٤٦
Yawma laa yughnee `anhum kaidumhum shai`anw wa laa hum yunsaroon
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
🎤 Your recording:
52:47 🔁 0/5
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ  ۝٤٧
Wa inna lillazeena zalamoo `azaaban doona zalika wa laakinna aksarahum laa ya`lamoon
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
🎤 Your recording:
52:48 🔁 0/5
وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ  ۝٤٨
Wasbir lihukmi rabbika fa innaka bi-a`yuninaa wa sabbih bihamdi rabbika heena taqoom
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
🎤 Your recording:
52:49 🔁 0/5
وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ  ۝٤٩
Wa minal laili fasabbihhu wa idbaaran nujoom
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!
🎤 Your recording:
💡 Tap any hidden word to reveal it temporarily — your progress is saved automatically in this browser.

🎉
🎊 Well Done! Memorization Complete
Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers