சூரா அபஸ pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அபஸ pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அபஸ மொழிபெயர்ப்பு. சூரா அபஸ (Meccan) 42 வசனம்.
Related
- சூரா அபஸ மொழிபெயர்ப்புதமிழ்
- சூரா அபஸ mp3கேள்
- Quran Index தமிழ்114
More சூரா PDF
சூரா அபஸ

ﭑﭒﭓ
80:1
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
ﭔﭕﭖﭗ
80:2
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
ﭘﭙﭚﭛﭜ
80:3
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
ﭝﭞﭟﭠﭡ
80:4
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
ﭢﭣﭤﭥ
80:5
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
ﭦﭧﭨﭩ
80:6
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
ﭪﭫﭬﭭﭮ
80:7
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
ﭯﭰﭱﭲﭳ
80:8
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
ﭴﭵﭶ
80:9
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
ﭷﭸﭹﭺ
80:10
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
ﭻﭼﭽﭾ
80:11
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
ﭿﮀﮁﮂ
80:12
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
ﮃﮄﮅﮆ
80:13
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
ﮇﮈﮉ
80:14
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
ﮊﮋﮌ
80:15
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
ﮍﮎﮏ
80:16
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
ﮐﮑﮒﮓﮔ
80:17
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
ﮕﮖﮗﮘﮙ
80:18
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
ﮚﮛﮜﮝﮞ
80:19
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ﮟﮠﮡﮢ
80:20
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ﮣﮤﮥﮦ
80:21
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
ﮧﮨﮩﮪﮫ
80:22
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
ﮬﮭﮮﮯﮰﮱ
80:23
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
ﯓﯔﯕﯖﯗ
80:24
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
ﯘﯙﯚﯛﯜ
80:25
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ﯝﯞﯟﯠﯡ
80:26
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
ﯢﯣﯤﯥ
80:27
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
ﯦﯧﯨ
80:28
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
ﯩﯪﯫ
80:29
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
ﯬﯭﯮ
80:30
அடர்ந்த தோட்டங்களையும்,
ﯯﯰﯱ
80:31
பழங்களையும், தீவனங்களையும்-
ﯲﯳﯴﯵ
80:32
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
ﯶﯷﯸﯹ
80:33
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
ﯺﯻﯼﯽﯾﯿ
80:34
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
ﰀﰁﰂ
80:35
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
ﰃﰄﰅ
80:36
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
ﰆﰇﰈﰉﰊﰋﰌ
80:37
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
ﰍﰎﰏﰐ
80:38
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ﰑﰒﰓ
80:39
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
ﰔﰕﰖﰗﰘ
80:40
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
ﭑﭒﭓ
80:41
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
ﭔﭕﭖﭗﭘ
80:42
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







