சூரா அபஸ
PDF —
Built right in your browser — download starts automatically
சூரா அபஸ pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அபஸ pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அபஸ மொழிபெயர்ப்பு. அபஸ (Meccan) 42 வசனம்.
Related
- அபஸ மொழிபெயர்ப்புதமிழ்
- அபஸ mp3கேள்
- Quran Index தமிழ்114
More சூரா PDF
சூரா அபஸ

ﭑﭒﭓ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
ﭔﭕﭖﭗ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
ﭘﭙﭚﭛﭜ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
ﭝﭞﭟﭠﭡ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
ﭢﭣﭤﭥ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
ﭦﭧﭨﭩ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
ﭪﭫﭬﭭﭮ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
ﭯﭰﭱﭲﭳ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
ﭴﭵﭶ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
ﭷﭸﭹﭺ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
ﭻﭼﭽﭾ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
ﭿﮀﮁﮂ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
ﮃﮄﮅﮆ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
ﮇﮈﮉ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
ﮊﮋﮌ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
ﮍﮎﮏ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
ﮐﮑﮒﮓﮔ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
ﮕﮖﮗﮘﮙ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
ﮚﮛﮜﮝﮞ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ﮟﮠﮡﮢ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ﮣﮤﮥﮦ
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
ﮧﮨﮩﮪﮫ
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
ﮬﮭﮮﮯﮰﮱ
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
ﯓﯔﯕﯖﯗ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
ﯘﯙﯚﯛﯜ
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ﯝﯞﯟﯠﯡ
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
ﯢﯣﯤﯥ
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
ﯦﯧﯨ
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
ﯩﯪﯫ
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
ﯬﯭﯮ
அடர்ந்த தோட்டங்களையும்,
ﯯﯰﯱ
பழங்களையும், தீவனங்களையும்-
ﯲﯳﯴﯵ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
ﯶﯷﯸﯹ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
ﯺﯻﯼﯽﯾﯿ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
ﰀﰁﰂ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
ﰃﰄﰅ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
ﰆﰇﰈﰉﰊﰋﰌ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
ﰍﰎﰏﰐ
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ﰑﰒﰓ
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
ﰔﰕﰖﰗﰘ
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
ﭑﭒﭓ
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
ﭔﭕﭖﭗﭘ
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers







