لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَّكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ ٢٩
🔤 Transliteration
Laisa `alaikum junaahun ann tadkhuloo buyootan ghaira maskoonatin feeha mataa`ul lakum; wallaahu ya`lamu maa tubdoona wa maa taktumoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
🌐 Additional reference in മലയാളം
சொற்பொருள் விளக்கம்:
- جُنَاحٌ (ஜுனாஹ்): குற்றம், தடை, பாவம்.
- غَيْرَ مَسْكُونَةٍ (கைரு மஸ்கூனா): வசிப்பிடமாகப் பயன்படுத்தப்படாத வீடுகள்; எவருக்கும் தனிப்பட்ட உரிமையாக இல்லாத பொது இடங்கள்.
- مَتَاعٌ (மதாஉ): பயன்பாடு, நன்மை, தேவையான பொருள் அல்லது வசதி.
விளக்கம்:
முந்தைய வசனத்தில், மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டளை இடம்பெற்றது. இந்த வசனத்தில், அந்தக் கட்டளைக்கு ஒரு விதிவிலக்கு தெளிவுபடுத்தப்படுகிறது. எவரும் நிரந்தரமாக வசிக்காத, பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் அல்லது இடங்களுக்குள் (எடுத்துக்காட்டாக, வழிப்போக்கர்கள் தங்கும் விடுதிகள், சத்திரங்கள், சந்தைகளில் உள்ள கடைகள், நூலகங்கள் போன்றவை) அனுமதி பெறாமல் நுழைவதில் எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில், இத்தகைய இடங்களில் உங்களுக்குப் பயன்பாடு அல்லது தேவை இருக்கலாம்; ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்பது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, இவற்றில் நுழைய அனுமதி அவசியமில்லை. இருப்பினும், இந்த அனுமதி நல்ல நோக்கத்திற்காக மட்டுமே என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் — உங்கள் எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள் அனைத்தையும் — அவன் முழுமையாக அறிந்திருக்கிறான். தீய நோக்கத்துடன் (உதாரணமாக, மற்றவர்களின் குறைபாடுகளைக் கவனிக்க அல்லது குழப்பம் விளைவிக்க) நுழைபவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
பயன்கள்:
- இஸ்லாம் மனிதர்களின் வசதியையும், நடைமுறைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சில சூழ்நிலைகளில் சட்டங்களை எளிதாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.
- பொது இடங்கள் அனைவருக்கும் சொந்தமானவை என்பதையும், அவற்றைப் பயன்படுத்துவதில் எவருக்கும் தடை இல்லை என்பதையும் இந்த வசனம் வலியுறுத்துகிறது.
- அல்லாஹ் நம் அனைத்து செயல்களையும், உள்ளரங்களையும் அறிந்தவன் என்பதால், நாம் எப்போதும் நல்ல நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.
- மற்றவர்களின் தனியுரிமையை மதிப்பதும், அவர்களின் வீடுகளில் அனுமதியின்றி நுழையாமல் இருப்பதும் இஸ்லாத்தின் உயர்ந்த ஒழுக்கமாகும்; இது சமூகத்தில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வளர்க்கிறது.
📜 வசனம் 27-31 — சூரா அன்-நூர்
27يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
28فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
29لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَّكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
30قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
31وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
மொழிபெயர்ப்பு — அன்-நூர் 29
சூரா அன்-நூர் வசனம் 29 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள்…
சூரா வசனம் 29/64 — சூரா அன்-நூர் النور (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நூர் கேள், சூரா அன்-நூர் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நூர் mp3, சூரா அன்-நூர் pdf. வசனம் 27–31. தமிழில்: മലയാളം.