அன்-நூர் · 30/64
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நூர்
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ۝٣٠
Qul lilmu` mineena yaghuuddoo min absaarihim wa yahfazoo furoojahum; zaalika azkaa lahum; innallaaha khabeerum bimaa yasna`oon
📖 தமிழில்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • يَغُضُّوا – தாழ்த்த வேண்டும் / கட்டுப்படுத்த வேண்டும்
  • أَبْصَارِهِمْ – தங்கள் பார்வைகளை
  • فُرُوجَهُمْ – தங்கள் மானத்தை / வெட்கத் தலங்களை
  • أَزْكَى – மிகத் தூய்மையானது / மிகச் சிறந்தது
  • خَبِيرٌ – மிக அறிந்தவன் / நன்கு அறிபவன்

விளக்கம்:

நபியே! நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். அதாவது, அந்நிய பெண்களைப் பார்ப்பது, மற்றும் பார்ப்பதற்கு அனுமதியில்லாத விஷயங்களைப் பார்ப்பது போன்றவற்றிலிருந்து தங்கள் கண்களைக் காத்துக் கொள்ளட்டும். மேலும், தங்கள் மானத்தைப் பாதுகாக்கட்டும் – விபச்சாரம், முறையற்ற உறவுகள், தங்கள் உடலின் மறைவிடங்களை மற்றவர்களுக்குக் காட்டுவது போன்ற அனைத்து விதமான தவறான செயல்களிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ளட்டும்.

இந்தக் கட்டளை அவர்களுக்கு மிகத் தூய்மையானதும், மேலானதுமாகும். ஏனெனில், பார்வையைக் கட்டுப்படுத்துவதும், மானத்தைப் பாதுகாப்பதும் இதயத்தின் தூய்மைக்கும், ஆன்மாவின் உயர்வுக்கும், சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்யும் அனைத்தையும் நன்கு அறிந்தவன். அவர்கள் செய்யும் நல்ல செயல்களையும், தீய செயல்களையும் அவனிடமிருந்து மறைக்க முடியாது. அவன் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி அல்லது தண்டனை வழங்குவான்.


பயன்கள்:

  1. இந்த வசனம் இஸ்லாம் ஒழுக்கத்திற்கும் கற்புக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பார்வையைக் கட்டுப்படுத்துவது இதயத்தின் தூய்மைக்கு முதல் படியாகும்.
  2. ஒரு முஸ்லிமின் கண்ணியமும் மேன்மையும் அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. உடல் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமே ஒருவன் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
  3. அல்லாஹ் நம் அனைத்து செயல்களையும் அறிந்தவன் என்பதை உணர்ந்து, நாம் எப்போதும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இந்த உணர்வு நம்மைத் தவறுகளிலிருந்து காக்கும்.
  4. இந்த வசனம் சமூகத்தில் ஒழுக்கம், கற்பு, கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த சட்டத்தை வழங்குகிறது. இதைப் பின்பற்றும் சமூகம் எப்போதும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
  5. பார்வையைத் தாழ்த்துவது என்பது வெறும் கண்களை மூடுவது மட்டுமல்ல; மனதின் எண்ணங்களையும், ஆசைகளையும் தூய்மைப்படுத்துவதாகும். இது ஒரு முஸ்லிமின் முழுமையான ஆளுமையை வடிவமைக்கிறது.


📜 வசனம் 28-32 — சூரா அன்-நூர்

28فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
29لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَّكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
30قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
31وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
32وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
அன்-நூர்குர்ஆன் பட்டியல்
64வசனம்
MedinanRevelation
30வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நூர் 30

சூரா அன்-நூர் வசனம் 30 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள…

சூரா வசனம் 30/64 — சூரா அன்-நூர் النور (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நூர் கேள், சூரா அன்-நூர் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நூர் mp3, சூரா அன்-நூர் pdf. வசனம் 28–32. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers