📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 526
சூரா அன்-நஜ்ம்
bismillah
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ  ۝١ مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ  ۝٢ وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ  ۝٣ إِنۡ هُوَ إِلَّا وَحۡيٌ يُوحَىٰ  ۝٤ عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ  ۝٥ ذُو مِرَّةٍ فَٱسۡتَوَىٰ  ۝٦ وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ  ۝٧ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ  ۝٨ فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ  ۝٩ فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ  ۝١٠ مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ  ۝١١ أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ  ۝١٢ وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ  ۝١٣ عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ  ۝١٤ عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ  ۝١٥ إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ  ۝١٦ مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ  ۝١٧ لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ  ۝١٨ أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ  ۝١٩ وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ  ۝٢٠ أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ  ۝٢١ تِلۡكَ إِذًا قِسۡمَةٌ ضِيزَىٰٓ  ۝٢٢ إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٌ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ  ۝٢٣ أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ  ۝٢٤ فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ  ۝٢٥ ۞ وَكَم مِّن مَّلَكٍ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ  ۝٢٦
சூரா அன்-நஜ்ம்
bismillah
53:1
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ  ۝١
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ  ۝٢
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3
وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ  ۝٣
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٌ يُوحَىٰ  ۝٤
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
53:5
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ  ۝٥
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:6
ذُو مِرَّةٍ فَٱسۡتَوَىٰ  ۝٦
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7
وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ  ۝٧
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ  ۝٨
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9
فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ  ۝٩
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
53:10
فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ  ۝١٠
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:11
مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ  ۝١١
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:12
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ  ۝١٢
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:13
وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ  ۝١٣
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
53:14
عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ  ۝١٤
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:15
عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ  ۝١٥
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:16
إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ  ۝١٦
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
53:17
مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ  ۝١٧
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
53:18
لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ  ۝١٨
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
53:19
أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ  ۝١٩
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:20
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ  ۝٢٠
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
53:21
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ  ۝٢١
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:22
تِلۡكَ إِذًا قِسۡمَةٌ ضِيزَىٰٓ  ۝٢٢
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:23
إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٌ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ  ۝٢٣
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:24
أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ  ۝٢٤
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
53:25
فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ  ۝٢٥
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
53:26
۞ وَكَم مِّن مَّلَكٍ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ  ۝٢٦
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.


📚Juz 27 📄526 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Sunday, August 30, 2026

Don't forget us in your sincere prayers