சூரா அல்-பலத் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-பலத் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-பலத் மொழிபெயர்ப்பு. சூரா அல்-பலத் (Meccan) 20 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-பலத்

ﭽﭾﭿﮀﮁ
90:1
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
ﮂﮃﮄﮅﮆ
90:2
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
ﮇﮈﮉﮊ
90:3
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
ﮋﮌﮍﮎﮏﮐ
90:4
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
ﮑﮒﮓﮔﮕﮖﮗ
90:5
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
ﮘﮙﮚﮛﮜ
90:6
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
ﮝﮞﮟﮠﮡﮢ
90:7
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
ﮣﮤﮥﮦﮧ
90:8
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
ﮨﮩﮪ
90:9
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
ﮫﮬﮭ
90:10
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
ﮮﮯﮰﮱ
90:11
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
ﯓﯔﯕﯖﯗ
90:12
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
ﯘﯙﯚ
90:13
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
ﯛﯜﯝﯞﯟﯠﯡ
90:14
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
ﯢﯣﯤﯥ
90:15
உறவினனான ஓர் அநாதைக்கோ,
ﯦﯧﯨﯩﯪ
90:16
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ﯫﯬﯭﯮﯯﯰﯱﯲﯳﯴ
90:17
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
ﯵﯶﯷﯸ
90:18
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
90:19
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
ﭘﭙﭚﭛ
90:20
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







