Wa izaa massal insaana durrun da`aa Rabbahoo muneeban ilaihi summa izaa khawwalahoo ni`matam minhu nasiya maa kaana yad`ooo ilaihi min qablu wa ja`ala lillaahi andaadal liyudilla `ansabeelih; qul tamatta` bikufrika qaleelan innaka min Ashaabin Naar
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே."
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
മനുഷ്യന് വല്ല വിഷമവും ബാധിച്ചാല് അവന് തന്റെ രക്ഷിതാവിങ്കലേക്ക് താഴ്മയോടെ മടങ്ങിക്കൊണ്ട് പ്രാര്ത്ഥിക്കും. എന്നിട്ട് തന്റെ പക്കല് നിന്നുള്ള വല്ല അനുഗ്രഹവും അല്ലാഹു അവന്ന് പ്രദാനം ചെയ്താല് ഏതൊന്നിനായി അവന് മുമ്പ് പ്രാര്ത്ഥിച്ചിരുന്നുവോ അതവന് മറന്നുപോകുന്നു. അല്ലാഹുവിന്റെ മാര്ഗത്തില് നിന്ന് വഴിതെറ്റിച്ച് കളയുവാന് വേണ്ടി അവന്ന് സമന്മാരെ സ്ഥാപിക്കുകയും ചെയ്യുന്നു. (നബിയേ,) പറയുക: നീ അല്പകാലം നിന്റെ ഈ സത്യനിഷേധവും കൊണ്ട് സുഖിച്ചു കൊള്ളുക. തീര്ച്ചയായും നീ നരകാവകാശികളുടെ കൂട്ടത്തിലാകുന്നു.
மனிதனுக்கு நோய், வறுமை, ஆபத்து போன்ற துன்பங்கள் ஏற்படும் போது, அவன் தனது இறைவனை நோக்கி மனம் திருந்தி, அவனிடமே மன்றாடுகிறான். தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குமாறு அல்லாஹ்விடம் மட்டுமே கெஞ்சுகிறான். ஆனால், அல்லாஹ் அவனுடைய துன்பத்தை நீக்கி, அவனுக்கு அருட்கொடைகளை வழங்கியவுடன், அவன் முன்பு துன்பத்தின் போது செய்த பிரார்த்தனைகளையும், அல்லாஹ்விடம் காட்டிய தஞ்சத்தையும் மறந்து விடுகிறான். மேலும், அல்லாஹ்வுக்கு இணையாக சிலைகளையும், பிற பொருட்களையும் ஏற்படுத்தி, மற்ற மக்களையும் அல்லாஹ்வின் நேர்வழியிலிருந்து வழிகெடுக்க முயல்கிறான்.
இத்தகைய செயல்களைச் செய்யும் காஃபிரிடம் நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகிறான்: "நீ உனது இறைமறுப்பில் சிறிது காலம் — உனது மரணம் வரை — சுகித்திருந்து கொள். நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன் ஆவாய்." இது அவனுக்கு எச்சரிக்கையாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது.
பயன்கள்:
மனிதன் துன்பத்தில் மட்டுமல்ல, இன்பத்திலும் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். இன்பம் வந்தவுடன் இறைவனை மறப்பது பெரும் இழிவான பண்பாகும்.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவனுடைய பரிவும் கருணையுமே; அவற்றைப் பெற்று மகிழும் போது நன்றி செலுத்துவது கடமை.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மிகப்பெரிய பாவம்; அது மனிதனை நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
இவ்வுலக வாழ்க்கை மிகக் குறுகியது; மறுமை நிலையானது. எனவே, மறுமையின் நிலையான இன்பத்திற்காகவே முயற்சிக்க வேண்டும்.
மனிதனின் இயல்பு நன்றி மறப்பதாக இருந்தாலும், அல்லாஹ்வின் அருளை நினைவுகூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே."
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன். மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே."
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்."
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.