Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakum musaddiqul lazee bainaa yadaihi wa litunzira ummal Quraa wa man hawlahaa; wallazeena yu`minoona bil Aakhirati yu`minoona bihee wa hum`alaa Salaatihim yuhaafizoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ഇതാ, നാം അവതരിപ്പിച്ച, നന്മ നിറഞ്ഞ ഒരു ഗ്രന്ഥം! അതിന്റെ മുമ്പുള്ള വേദത്തെ ശരിവെക്കുന്നതത്രെ അത്. മാതൃനഗരി (മക്ക) യിലും അതിന്റെ ചുറ്റുഭാഗത്തുമുള്ളവര്ക്ക് നീ താക്കീത് നല്കുവാന് വേണ്ടി ഉള്ളതുമാണ് അത്. പരലോകത്തില് വിശ്വസിക്കുന്നവര് ഈ ഗ്രന്ഥത്തില് വിശ്വസിക്കുന്നതാണ്. തങ്ങളുടെ പ്രാര്ത്ഥന അവര് മുറപ്രകാരം സൂക്ഷിച്ച് പോരുന്നതുമാണ്.
அல்லதீ பைனா யதைஹி (الَّذِي بَيْنَ يَدَيْهِ): தனக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள்).
உம்முல் குரா (أُمِّ الْقُرَى): ஊர்களின் தாய் — மக்கா நகரம்.
யுஹாஃபிழூன் (يُحَافِظُونَ): தொடர்ந்து பேணிக் காப்பவர்கள்.
விளக்கம்:
இந்தத் திருக்குர்ஆன் உங்கள் மீது இறக்கியருளப்பட்ட ஒரு மகத்தான வேதமாகும். இது மிக்க பாக்கியமும் நன்மையும் நிறைந்தது; தனக்கு முன்னர் இறக்கப்பட்ட தவ்றாத், இன்ஜீல் போன்ற வேதங்களை உண்மைப்படுத்துவதாகும். இது மக்காவாசிகளையும், அவர்களைச் சூழந்துள்ள உலகின் கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள அனைத்து மனிதர்களையும் அல்லாஹ்வின் வேதனையைப் பற்றி எச்சரிப்பதற்காகவே இறக்கப்பட்டது. மேலும், மறுமை நாளை உண்மையாக நம்புகின்றவர்கள் இந்த வேதத்தை அல்லாஹ்வின் வார்த்தையாக ஏற்று அதன் மீது ஈமான் கொள்கின்றனர்; அவர்கள் தங்கள் கடமையான ஐவேளைத் தொழுகைகளை அவற்றின் குறிப்பிட்ட நேரங்களில், அவற்றின் கடமைகள், கட்டாயங்கள், சுன்னத்துகள் அனைத்தையும் பேணி, தொடர்ந்து நிலைத்திருந்து பாதுகாத்து வருகின்றனர்.
பயன்கள்:
திருக்குர்ஆன் அனைத்து முந்தைய வேதங்களையும் உண்மைப்படுத்தும் இறுதி வேதம் என்பதால், அது மனித குலத்திற்கு அல்லாஹ்வின் முழுமையான வழிகாட்டலாக அமைந்துள்ளது.
இந்த வேதம் மக்கா மட்டுமின்றி உலகம் முழுவதற்குமான பொதுவான அழைப்பாகும் — இது இஸ்லாத்தின் உலகளாவிய தன்மையை வெளிப்படுத்துகிறது.
மறுமை நம்பிக்கையே இந்த வேதத்தை ஏற்று அதன் படி வாழ்வதற்கான அடிப்படை; அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவன் இந்த வேதத்தின் போதனைகளைப் பின்பற்ற முடியும்.
தொழுகையைப் பேணுதல் என்பது ஈமானின் அடையாளமாகும்; அது ஒருவனைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தி, அவனை அல்லாஹ்வுடன் இணைக்கும் உன்னதமான வணக்கம்.
இந்த வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் அருள் மற்றும் பாக்கியத்தின் ஆதாரமாகும் — அதை ஓதுவதிலும், சிந்திப்பதிலும், செயல்படுத்துவதிலும் மகத்தான நன்மைகள் உள்ளன.
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
சூரா அல்-அன்ஆம் வசனம் 92 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம்…
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.