Kutiba alaikumulqitaalu wa huwa kurhullakum wa `asaaa an takrahoo shai`anw wa huwa khairullakum wa `asaaa an tuhibbo shai`anw wa huwa sharrullakum; wallaahu ya`lamu wa antum laa ta`lamoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
യുദ്ധം ചെയ്യാന് നിങ്ങള്ക്കിതാ നിര്ബന്ധ കല്പന നല്കപ്പെട്ടിരിക്കുന്നു. അതാകട്ടെ നിങ്ങള്ക്ക് അനിഷ്ടകരമാകുന്നു. എന്നാല് ഒരു കാര്യം നിങ്ങള് വെറുക്കുകയും (യഥാര്ത്ഥത്തില്) അത് നിങ്ങള്ക്ക് ഗുണകരമായിരിക്കുകയും ചെയ്യാം. നിങ്ങളൊരു കാര്യം ഇഷ്ടപ്പെടുകയും (യഥാര്ത്ഥത്തില്) നിങ്ങള്ക്കത് ദോഷകരമായിരിക്കുകയും ചെയ്തെന്നും വരാം. അല്ലാഹു അറിയുന്നു. നിങ്ങള് അറിയുന്നില്ല.
الْقِتَالُ – போர் (அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்).
كُرْهٌ – வெறுப்பு, சிரமம், மனதிற்கு பிடிக்காதது.
عَسَى – ஒருவேளை, சாத்தியம் (இது நம்பிக்கையைக் குறிக்கும்).
خَيْرٌ – நன்மை, பயன்.
شَرٌّ – தீமை, கேடு.
விளக்கம்:
அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அறப்போரை (ஜிஹாத்) கடமையாக்கியுள்ளான். இது மனித இயல்புக்கு வெறுப்பானதாகவும், சிரமமானதாகவும் இருக்கலாம்; ஏனெனில் அதில் உயிர், பொருள், உடல் சிரமம் போன்றவை உள்ளன. ஆனால் அல்லாஹ் உங்களுக்கு நன்மையானதை அறிந்தவன். நீங்கள் வெறுக்கும் ஒரு விஷயம் (போர்) உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் – அதில் வெற்றி, வீர மரணம் (ஷஹாதத்), சொர்க்கம், மேன்மை போன்றவை உள்ளன. அதேபோல், நீங்கள் விரும்பும் ஒரு விஷயம் (போரிலிருந்து விலகியிருப்பது) உங்களுக்குத் தீமையாக இருக்கலாம் – அதில் அவமானம், எதிரிகளின் ஆதிக்கம், நன்மைகளை இழத்தல் போன்றவை உள்ளன. அல்லாஹ் உங்கள் நலன்களை முழுமையாக அறிந்தவன்; நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே, அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து செயல்படுங்கள்; அதில்தான் உங்கள் நலன் இருக்கிறது.
பயன்கள் (பாடங்கள்):
அல்லாஹ் விதிக்கும் ஒவ்வொரு கட்டளையிலும் மறைந்த நன்மைகள் இருக்கின்றன; நம் வரையறுக்கப்பட்ட அறிவால் அதை உணர முடியாமல் போகலாம்.
மனிதன் தன் விருப்பு-வெறுப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யக்கூடாது; அல்லாஹ்வின் ஞானம்தான் முழுமையானது.
அறப்போர் (ஜிஹாத்) முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது; அது சிரமமாக இருந்தாலும், அதில் மேன்மையும் வெற்றியும் உள்ளன.
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
(நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.