Fa izaa qadaitumus Salaata fazkurul laaha qiyaamanw wa qu`oodanw wa `alaa junoobikum; fa izat maanantum fa aqeemus Salaah; innas Salaata kaanat `alal mu`mineena kitaabam mawqootaa
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അങ്ങനെ നമസ്കാരം നിര്വഹിച്ചു കഴിഞ്ഞാല് നിങ്ങള് നിന്നു കൊണ്ടും ഇരുന്ന് കൊണ്ടും കിടന്ന് കൊണ്ടും അല്ലാഹുവെ ഓര്മിക്കുക. സമാധാനാവസ്ഥയിലായാല് നിങ്ങള് നമസ്കാരം മുറപ്രകാരം തന്നെ നിര്വഹിക്കുക. തീര്ച്ചയായും നമസ്കാരം സത്യവിശ്വാസികള്ക്ക് സമയം നിര്ണയിക്കപ്പെട്ട ഒരു നിര്ബന്ധബാധ്യതയാകുന്നു.
كِتَابًا مَّوْقُوتًا: குறிப்பிட்ட நேரத்தில் கடமையாக்கப்பட்ட விதி (காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட கடமை).
விளக்கம்:
முஃமின்களே! போர் போன்ற அச்சமான சூழ்நிலையில் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அல்லாஹ்வை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்), தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்), தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்) போன்ற திக்ருகளால் நினைவு கூறுங்கள். நீங்கள் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், பக்கவாட்டில் சாய்ந்த நிலையிலும் என எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். அச்சம் நீங்கி, மன அமைதியும் பாதுகாப்பும் ஏற்பட்டவுடன், தொழுகையை அதன் அனைத்து நிபந்தனைகள், கடமைகள், வாஜிபுகள் மற்றும் சுன்னத்துகளுடன் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் கடமையாக்கப்பட்ட ஒரு விதியாகும்; அதை அதன் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் நிறைவேற்றுவது கடமையாகும். (பயணத்தில் சுருக்கிக் கூட்டித் தொழுவதற்கான சலுகை உள்ளது.)
பயன்கள்:
தொழுகை முடிந்த பின்னரும் அல்லாஹ்வை நினைவு கூர்வது முஃமினின் அடையாளமாகும்; இது இதயத்தை அல்லாஹ்வுடன் இணைத்து வைக்கிறது.
எந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பது மனதுக்கு அமைதியையும், வாழ்க்கைக்கு பரக்கத்தையும் தருகிறது.
தொழுகை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது; அதை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது முஃமினின் கடமையாகும்.
அச்சமான சூழ்நிலையிலும் தொழுகையை விடக்கூடாது என்பதை இந்த வசனம் கற்றுத்தருகிறது; இது இஸ்லாத்தின் மீதான உறுதியான பற்றுதலையும், அல்லாஹ்வின் மீதான முழு நம்பிக்கையையும் வளர்க்கிறது.
தொழுகையின் மூலம் மனிதன் அல்லாஹ்விடம் நெருக்கமடைகிறான்; இது அவனது பாவங்களை மன்னிக்கவும், அவனை நல்லோர்களில் சேர்க்கவும் வழிவகுக்கிறது.
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;. ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்;. நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
சூரா அன்-நிசா வசனம் 103 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது…
சூரா வசனம் 103/176 — சூரா அன்-நிசா النساء (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நிசா கேள், சூரா அன்-நிசா மொழிபெயர்ப்பு, சூரா அன்-நிசா mp3, சூரா அன்-நிசா pdf. வசனம் 101–105. தமிழில்: മലയാളം.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.