Yaaa aiyuhal lazeena aamanooo inna kaseeramminal ahbaari warruhbaani la yaakuloona amwaalan naasi bil baatili wa yasuddoona `an sabeelil laah; wallazeena yaknizoonaz zahaba wal fiddata wa laayunfiqoonahaa fee sabeelil laahi fabashshirhum bi`azaabin aleem
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
സത്യവിശ്വാസികളേ, പണ്ഡിതന്മാരിലും പുരോഹിതന്മാരിലും പെട്ട ധാരാളം പേര് ജനങ്ങളുടെ ധനം അന്യായമായി തിന്നുകയും, അല്ലാഹുവിന്റെ മാര്ഗത്തില് നിന്ന് (അവരെ) തടയുകയും ചെയ്യുന്നു. സ്വര്ണവും വെള്ളിയും നിക്ഷേപമാക്കിവെക്കുകയും, അല്ലാഹുവിന്റെ മാര്ഗത്തില് അത് ചെലവഴിക്കാതിരിക്കുകയും ചെയ്യുന്നവരാരോ അവര്ക്ക് വേദനയേറിയ ശിക്ഷയെപ്പറ്റി സന്തോഷവാര്ത്ത അറിയിക്കുക.
அல்அஹ்பார் (الأَحْبَارِ): யூத அறிஞர்கள் (மதத் தலைவர்கள்).
அர்ருஹ்பான் (الرُّهْبَانِ): கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் (துறவிகள்).
பில்பாத்தில் (بِالْبَاطِلِ): நியாயமற்ற முறையில், பொய்யான வழிகளில்.
யக்னிஸூன் (يَكْنِزُونَ): சேமித்து வைத்தல் (பொக்கிஷமாக்குதல்).
அலீம் (أَلِيم): மிக வேதனையான (துன்புறுத்தும்) தண்டனை.
விளக்கம்:
நம்பிக்கையாளர்களே! யூத அறிஞர்களிலும் கிறிஸ்தவ துறவிகளிலும் பலர் மக்களின் செல்வங்களை நியாயமற்ற முறையில் சாப்பிடுகிறார்கள். அதாவது, அவர்கள் லஞ்சம் வாங்குவது, மக்களின் உடைமைகளை ஏமாற்றி அபகரிப்பது போன்ற தவறான வழிகளில் சம்பாதிக்கிறார்கள். மேலும், அவர்கள் மக்களை அல்லாஹ்வின் பாதையில் (இஸ்லாத்தில்) நுழைவதைத் தடுக்கிறார்கள்; அவர்களை நேர்வழியிலிருந்து திருப்பிவிடுகிறார்கள்.
இன்னும், பொன் மற்றும் வெள்ளியைச் சேமித்து வைத்து, அவற்றின் மீது கடமையான ஸகாத் (தர்மம்) கொடுக்காமல், அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருப்பவர்களுக்கு, (நபியே!) மிக வேதனையான தண்டனையின் நற்செய்தியைக் கூறுங்கள். அவர்கள் சேமித்து வைத்த செல்வங்கள் மறுமை நாளில் அவர்களுக்கு எதிராகச் சாட்சியாகி, அவர்களை வேதனைக்கு உள்ளாக்கும்.
இந்த வசனத்திலிருந்து பெறும் பாடங்கள்:
மார்க்க அறிஞர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் கூட, தவறான வழிகளில் மக்களின் உரிமைகளை அபகரிப்பது பெரும் பாவமாகும். மார்க்கப் பெயர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காது.
மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுப்பது மிகக் கடுமையான குற்றமாகும்; அது மற்றவர்களின் நேர்வழியையும் பாதிக்கிறது.
செல்வத்தைச் சேமித்து வைப்பது மட்டும் குற்றமல்ல; அதில் கடமையான ஸகாத் மற்றும் ஏழைகளின் உரிமைகளை வழங்காமல் இருப்பதே குற்றமாகும். செல்வம் அல்லாஹ்வின் அருட்கொடை; அதை அவனது பாதையில் செலவிட வேண்டும்.
இஸ்லாம் செல்வத்தை வெறுக்கவில்லை; மாறாக, அதை நியாயமான முறையில் சம்பாதித்து, அல்லாஹ்வின் வழியில் செலவிடும்போது அது புனிதமானதாகிறது. ஸகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது.
மறுமை நாளில் சேமித்த செல்வங்கள் வேதனைக்குக் காரணமாகும் என்பதை அறிந்து, நாம் நம் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தாராளமாகச் செலவிட வேண்டும்; இதுவே நம்மை நரக வேதனையிலிருந்து காக்கும்.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.