Yawma yuhmaa `alaihaa fee naari jahannama fatukwaa bihaa jibaahuhum haazaa maa kanaztum li anfusikum fazooqoo maa kuntum taknizoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
നരകാഗ്നിയില് വെച്ച് അവ ചുട്ടുപഴുപ്പിക്കപ്പെടുകയും, എന്നിട്ടത് കൊണ്ട് അവരുടെ നെറ്റികളിലും പാര്ശ്വങ്ങളിലും മുതുകുകളിലും ചൂടുവെക്കപ്പെടുകയും ചെയ്യുന്ന ദിവസം (അവരോട് പറയപ്പെടും) : നിങ്ങള് നിങ്ങള്ക്ക് വേണ്ടി തന്നെ നിക്ഷേപിച്ചുവെച്ചതാണിത്. അതിനാല് നിങ്ങള് നിക്ഷേപിച്ച് വെച്ചിരുന്നത് നിങ്ങള് ആസ്വദിച്ച് കൊള്ളുക.
كَنَزْتُمْ: நீங்கள் சேமித்து வைத்தீர்கள் (அதன் கடமைகளை நிறைவேற்றாமல்).
விளக்கம்:
மறுமை நாளில், பொன் மற்றும் வெள்ளியைச் சேமித்து வைத்து, அவற்றில் அல்லாஹ்வுக்குரிய உரிமைகளை (ஸகாத், தர்மம் போன்றவை) நிறைவேற்றாதவர்களின் அந்தச் செல்வங்கள் நரக நெருப்பில் மிகுதியாகச் சூடேற்றப்படும். அவை மிகுந்த வெப்பமடைந்ததும், அவற்றால் அவர்களின் நெற்றிகள், விலாப்புறங்கள் மற்றும் முதுகுகள் சுடப்படும். அப்போது அவர்களுக்கு நிந்தனை செய்யும் விதமாகக் கூறப்படும்: "இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்த செல்வம்! இப்போது நீங்கள் சேமித்து வைத்ததன் வேதனையைச் சுவையுங்கள்!" — அதாவது, அல்லாஹ்வின் கடமைகளைத் தடுத்து வைத்ததன் பயங்கரமான விளைவை அனுபவியுங்கள் என்பதே இதன் பொருள்.
பயன்கள்:
செல்வம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடை; அதில் ஏழைகள், எளியவர்களின் உரிமையும் உண்டு. அதை முறையாகச் செலுத்தினால் அது பரக்கத் (அருள்) பெறும்.
செல்வத்தைச் சேமித்து வைப்பது மட்டும் குற்றமல்ல; அதன் கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதே பெரும் பாவம். இந்தக் கடமைகளை நிறைவேற்றுபவர்கள் நரக வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இவ்வுலகில் செல்வம் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; ஆனால் மறுமையில் அதுவே வேதனைக்குக் காரணமாகிவிடும். எனவே, அறிவுள்ளவர்கள் தம் செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழித்து, மறுமை வெற்றியைத் தேடிக்கொள்வார்கள்.
இந்த வசனம் முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும் — தம் செல்வத்தைப் பாதுகாக்கவும், அதன் மூலம் நன்மைகளைச் சேர்க்கவும் வழிகாட்டுகிறது. இது இஸ்லாம் செல்வத்தை எவ்வாறு சீரான முறையில் பயன்படுத்த வழிகாட்டுகிறது என்பதைக் காட்டுகிறது.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.