Surah Al-Mursalat with Tamil

  1. Surah mp3
  2. More
  3. Tamil
The Holy Quran | Quran translation | Language Tamil | Surah Mursalat | المرسلات - Ayat Count 50 - The number of the surah in moshaf: 77 - The meaning of the surah in English: Those Sent Forth.

وَالْمُرْسَلَاتِ عُرْفًا(1)

 தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

فَالْعَاصِفَاتِ عَصْفًا(2)

 வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

وَالنَّاشِرَاتِ نَشْرًا(3)

 (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

فَالْفَارِقَاتِ فَرْقًا(4)

 (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

فَالْمُلْقِيَاتِ ذِكْرًا(5)

 (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

عُذْرًا أَوْ نُذْرًا(6)

 (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ(7)

 நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

فَإِذَا النُّجُومُ طُمِسَتْ(8)

 இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ(9)

 மேலும், வானம் பிளக்கப்படும் போது-

وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ(10)

 அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ(11)

 மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ(12)

 எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

لِيَوْمِ الْفَصْلِ(13)

 தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ(14)

 மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(15)

 (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ(16)

 முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ(17)

 பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ(18)

 குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(19)

 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ(20)

 அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ(21)

 பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ(22)

 ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ(23)

 இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(24)

 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا(25)

 பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

أَحْيَاءً وَأَمْوَاتًا(26)

 உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا(27)

 அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(28)

 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ(29)

 "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ(30)

 மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ(31)

 (அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ(32)

 நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ(33)

 நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(34)

 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ(35)

 இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ(36)

 அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(37)

 பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ(38)

 இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ(39)

 எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(40)

 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ(41)

 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ(42)

 இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ(43)

 "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).

إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(44)

 நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(45)

 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ(46)

 (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(47)

 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ(48)

 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(49)

 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ(50)

 எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?


More surahs in Tamil:


Al-Baqarah Al-'Imran An-Nisa'
Al-Ma'idah Yusuf Ibrahim
Al-Hijr Al-Kahf Maryam
Al-Hajj Al-Qasas Al-'Ankabut
As-Sajdah Ya Sin Ad-Dukhan
Al-Fath Al-Hujurat Qaf
An-Najm Ar-Rahman Al-Waqi'ah
Al-Hashr Al-Mulk Al-Haqqah
Al-Inshiqaq Al-A'la Al-Ghashiyah

Download surah Al-Mursalat with the voice of the most famous Quran reciters :

surah Al-Mursalat mp3 : choose the reciter to listen and download the chapter Al-Mursalat Complete with high quality
surah Al-Mursalat Ahmed El Agamy
Ahmed Al Ajmy
surah Al-Mursalat Bandar Balila
Bandar Balila
surah Al-Mursalat Khalid Al Jalil
Khalid Al Jalil
surah Al-Mursalat Saad Al Ghamdi
Saad Al Ghamdi
surah Al-Mursalat Saud Al Shuraim
Saud Al Shuraim
surah Al-Mursalat Abdul Basit Abdul Samad
Abdul Basit
surah Al-Mursalat Abdul Rashid Sufi
Abdul Rashid Sufi
surah Al-Mursalat Abdullah Basfar
Abdullah Basfar
surah Al-Mursalat Abdullah Awwad Al Juhani
Abdullah Al Juhani
surah Al-Mursalat Fares Abbad
Fares Abbad
surah Al-Mursalat Maher Al Muaiqly
Maher Al Muaiqly
surah Al-Mursalat Muhammad Siddiq Al Minshawi
Al Minshawi
surah Al-Mursalat Al Hosary
Al Hosary
surah Al-Mursalat Al-afasi
Mishari Al-afasi
surah Al-Mursalat Yasser Al Dosari
Yasser Al Dosari


Saturday, April 27, 2024

لا تنسنا من دعوة صالحة بظهر الغيب