Kazaalika arsalnaaka feee ummatin qad khalat min qablihaaa umamul litatluwa `alaihimul lazeee awhainaaa ilaika wa hum yakfuroona bir Rahmaaan; qul Huwa Rabbee laaa ilaaha illaa Huwa Rabbee laaa ilaaha illaa Huwa `alaihi tawakkaltu wa ilaihi mataab
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അപ്രകാരം നിന്നെ നാം ഒരു സമുദായത്തില് ദൂതനായി നിയോഗിച്ചിരിക്കുന്നു. അതിന്നു മുമ്പ് പല സമുദായങ്ങളും കഴിഞ്ഞുപോയിട്ടുണ്ട്. നിനക്ക് നാം ദിവ്യസന്ദേശമായി നല്കിയിട്ടുള്ളത് അവര്ക്ക് ഓതികേള്പിക്കുവാന് വേണ്ടിയാണ് (നിന്നെ നിയോഗിച്ചത്.) അവരാകട്ടെ, പരമകാരുണികനായ ദൈവത്തില് അവിശ്വസിക്കുന്നു. പറയുക: അവനാണ് എന്റെ രക്ഷിതാവ്. അവനല്ലാതെ യാതൊരു ദൈവവുമില്ല. അവന്റെ മേലാണ് ഞാന് ഭരമേല്പിച്ചിരിക്കുന്നത്. അവനിലേക്കാണ് എന്റെ മടക്കം.
مَتَاب – மீளும் இடம், பாவமன்னிப்புக் கோரி திரும்பும் இடம்.
விளக்கம்:
நபியே! முந்தைய தூதர்களை அவர்களுடைய சமுதாயங்களுக்கு அனுப்பியதைப் போன்றே, உம்மையும் ஒரு சமுதாயத்திற்கு அனுப்பியுள்ளோம். உமக்கு முன்னர் பல தூதர்களும் அவர்களுடைய சமுதாயங்களும் வந்து சென்றுள்ளனர். உமக்கு நாம் அறிவித்த வேதத்தை (குர்ஆனை) அவர்களுக்கு ஓதிக் காட்டுவதற்காகவே உம்மை அனுப்பினோம். இந்தக் குர்ஆனே உம்முடைய உண்மைத்தன்மைக்குப் போதுமான சான்றாகும்.
ஆனால், உம்முடைய சமுதாயத்தினரின் நிலை என்னவென்றால், அவர்கள் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வை மறுத்து, அவனுக்கு இணை வைக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கருணையை ஏற்க மறுத்து, அவனுடைய திருப்பெயரையே ஏற்காது நிராகரிக்கின்றனர்.
நபியே! அவர்களுக்கு நீர் கூறுவீராக: "நீங்கள் மறுக்கும் அந்த அளவற்ற அருளாளனே என் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. நான் என் எல்லா விவகாரங்களிலும் அவனையே நம்பியுள்ளேன். அவனிடமே நான் மீள்வேன், அவனிடமே என் பாவமன்னிப்புக் கோரி திரும்புகிறேன்."
பயன்கள்:
இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுடைய செய்தி ஒன்றே என்பதும் தெளிவாகிறது. இது நபிமார்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
அல்லாஹ்வின் கருணை மிக விரிவானது; அவனை "அர்ரஹ்மான்" என்ற பெயரால் அழைப்பது அவனுடைய கருணையை நினைவூட்டுகிறது. மனிதன் எப்போதும் அவனுடைய கருணையை எதிர்பார்க்கலாம்.
ஒரு முஸ்லிமின் வாழ்க்கை அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவனிடமே மீள்வதாக இருக்க வேண்டும். இது வாழ்க்கையில் நம்பிக்கையையும் அமைதியையும் தருகிறது.
குர்ஆன் ஓதப்பட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதே தூதர்களின் முக்கிய பணியாக இருந்தது. இது குர்ஆனின் மகத்துவத்தையும், அதை ஓதி அமல் செய்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
நிராகரிப்பாளர்கள் எவ்வளவு எதிர்த்தாலும், உண்மையைத் தெளிவாகக் கூற வேண்டும் என்பதற்கு இந்த வசனம் நமக்கு பாடம் கற்பிக்கிறது.
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.