Wa laqadis tuhzi`a bi Rusulim min qablika fa amlaitu lillazeena kafaroo summa akhaztuhum fakaifa kaana `iqaab
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
തീര്ച്ചയായും നിനക്കു മുമ്പും ദൂതന്മാര് പരിഹസിക്കപ്പെട്ടിട്ടുണ്ട്. അപ്പോള് അവിശ്വസിച്ചവര്ക്ക് ഞാന് സമയം നീട്ടികൊടുക്കുകയും, പിന്നീട് അവരെ ഞാന് പിടികൂടുകയും ചെയ്തു. അപ്പോള് എന്റെ ശിക്ഷ എങ്ങനെയായിരുന്നു!
فَأَمْلَيْتُ: நான் அவர்களுக்கு அவகாசம் கொடுத்தேன், தாமதப்படுத்தினேன்.
أَخَذْتُهُمْ: நான் அவர்களைப் பிடித்தேன் (தண்டித்தேன்).
عِقَابِ: எனது தண்டனை.
விளக்கம்:
நபியே! உம்மை இந்த மக்கள் பரிகசிப்பதைக் கண்டு நீர் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உமக்கு முன் வந்த தூதர்களும் இவ்வாறே பரிகசிக்கப்பட்டார்கள். அவர்களுடைய சமூகங்களும் அவர்களைப் பொய்யாக்கி ஏளனம் செய்தனர். ஆனால் நான் அவ்வாறு செய்த காஃபிர்களுக்கு உடனடியாகத் தண்டனை கொடுக்காமல், அவர்களுக்கு அவகாசம் அளித்தேன். அவர்கள் தங்கள் வழியில் தொடர்ந்தார்கள். பின்னர், நான் அவர்களைப் பிடித்தேன் — உலகில் வெள்ளம், பேரழிவு, போர் போன்றவற்றாலும், மறுமையில் நரக நெருப்பாலும். அப்போது அவர்களுக்கு என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதைப் பார்ப்பீராக! அது மிகக் கடுமையானதும், வேதனையானதுமாக இருந்தது.
இந்த வசனத்திலிருந்து பெறும் பாடங்கள்:
தூதர்கள் அனைவரும் சோதனைகளைச் சந்தித்துள்ளனர்; இது நபிமார்களின் வழிமுறையாகும். எனவே, இன்னல்களைச் சந்திக்கும் போது பொறுமையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் அவசரப்படுவதில்லை; அவன் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுப்பது அவர்கள் மீதுள்ள அன்பினால் அல்ல, மாறாக அவர்கள் மேலும் வழிகேட்டில் ஆழ்ந்து, பின்னர் தண்டனை மிகக் கடுமையாக இருப்பதற்காகவே ஆகும்.
அல்லாஹ்வின் தண்டனை தவிர்க்க முடியாதது; அவகாசம் என்பது மன்னிப்புக்கான வாய்ப்பு அல்ல, மாறாக சோதனையாகும்.
நபியே! இந்த வசனம் உமக்கு ஆறுதலாக உள்ளது — உமக்கு முன் வந்த தூதர்களும் இதையே சந்தித்தனர்; எனவே நீர் தனிமையில் இல்லை.
மனிதன் அல்லாஹ்வின் அவகாசத்தால் ஏமாற்றப்படக்கூடாது; ஒவ்வொரு நாளும் அவனது தண்டனை நெருங்கிக்கொண்டே இருக்கிறது.
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்; "அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?" என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.