Yaa nisaaa`an Nabiyyi lastunna ka ahadim minan nisaaa`i init taqaitunna falaa takhda`na bilqawli fa yatma`al lazee fee qalbihee maradunw wa qulna qawlam ma`roofaa
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
പ്രവാചക പത്നിമാരേ, സ്ത്രീകളില് മറ്റു ആരെപ്പോലെയുമല്ല നിങ്ങള്. നിങ്ങള് ധര്മ്മനിഷ്ഠ പാലിക്കുന്നുവെങ്കില് നിങ്ങള് (അന്യരോട്) അനുനയ സ്വരത്തില് സംസാരിക്കരുത്. അപ്പോള് ഹൃദയത്തില് രോഗമുള്ളവന് മോഹം തോന്നിയേക്കും. ന്യായമായ വാക്ക് നിങ്ങള് പറഞ്ഞു കൊള്ളുക.
நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களே! நீங்கள் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்லர். உங்களுக்கு மிக உயர்ந்த கண்ணியமும் சிறப்பும் உண்டு. நீங்கள் இறைவனை அஞ்சி நடந்தால், உங்கள் சிறப்பு மேலும் உயர்ந்து, உங்களுக்குரிய நிலை மற்ற பெண்களுக்கு இல்லாத சிறப்பானதாக அமையும். எனவே, அந்நிய ஆண்களிடம் பேசும்போது குரலை மென்மையாக்கி, இனிமையான தொனியில் பேச வேண்டாம். ஏனெனில், அது எவரது இதயத்தில் நோய் (நயவஞ்சகம், தீய ஆசை) இருக்கிறதோ அவருக்கு தவறான எண்ணத்தைத் தூண்டும். மாறாக, கண்ணியமான, தெளிவான, தேவைக்கான பேச்சை மட்டுமே பேசுங்கள். இந்தக் கட்டளை நபி துணைவியருக்கு மட்டுமல்ல, இறைவனையும் மறுமை நாளையும் நம்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும்.
பயன்கள்:
இறைவனுக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு மிக உயர்ந்த கண்ணியமும் சிறப்பும் உண்டு என்பதை இது உணர்த்துகிறது.
பெண்கள் தங்கள் பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இது போதிக்கிறது.
சமூகத்தில் தீய எண்ணங்களைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்ப்பது இறைநெறியின் அடிப்படைக் கடமையாகும்.
இஸ்லாம் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் மார்க்கம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
சூரா அல்-அஹ்ஸாப் வசனம் 32 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க…
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.