அல்-அஹ்ஸாப் · 33/73
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அஹ்ஸாப்
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا ۝٣٣
Wa qarna fee bu yoo tikunna wa laa tabarrajna tabarrujal Jaahiliyyatil oolaa wa aqimnas Salaata w aaateenaz Zakaata wa ati`nal laaha wa Rasoolah; innamaa yureedul laahu liyuzhiba `ankumur rijsa Ahlal Bayti wa yutahhirakum tatheeraa
📖 தமிழில்
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • وَقَرْنَ: உங்கள் வீடுகளில் நிலைத்திருங்கள், அமைதியாக இருங்கள்.
  • لَا تَبَرَّجْنَ: அழகுகளை வெளிப்படுத்தாதீர்கள்.
  • الْجَاهِلِيَّةِ الْأُولَى: இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலம்.
  • الرِّجْسَ: அசுத்தம், பாவம், தீமை.
  • أَهْلَ الْبَيْتِ: நபி (ஸல்) அவர்களின் வீட்டார் – குறிப்பாக அவர்களின் துணைவியர்.

விளக்கம்:

நபி (ஸல்) அவர்களின் துணைவியரே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே நிலைத்திருங்கள். தேவையின்றி வெளியே செல்லாதீர்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்துப் பெண்கள் செய்தது போல், உங்கள் அழகுகளையும் அலங்காரங்களையும் அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்தாதீர்கள். அவர்கள் தங்கள் அழகுகளைக் காண்பித்து ஆண்களைக் கவர்ந்தார்கள். அத்தகைய செயலை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும், தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரங்களில் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களில் அல்லாஹ் விதித்துள்ள ஸகாத்தை வழங்குங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அவர்கள் கட்டளையிட்டவற்றில் கீழ்ப்படிந்து, அவர்கள் தடுத்தவற்றிலிருந்து விலகுங்கள்.

இந்தக் கட்டளைகள் அனைத்தும் வீண் அல்ல. அல்லாஹ் உங்களிடமிருந்து – நபி (ஸல்) அவர்களின் வீட்டாரே – அசுத்தத்தையும் பாவத்தையும் நீக்கி, உங்களை முழுமையான தூய்மையுடன் தூய்மைப்படுத்தவே விரும்புகிறான். இது உங்களுக்கு அல்லாஹ்வின் மகத்தான அருளாகும்.


பயன்கள்:

  1. வீட்டை அமைதியான இடமாக மாற்றி, குடும்ப வாழ்வில் பரக்கத் (அருள்) ஏற்படுகிறது.
  2. பெண்களின் கண்ணியமும் மரியாதையும் பாதுகாக்கப்படுகிறது; சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த இடம் கிடைக்கிறது.
  3. தொழுகையும் ஸகாத்தும் ஒழுங்காக நிறைவேற்றப்படும்போது, அல்லாஹ்வின் பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும்.
  4. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிதல் ஒருவரின் வாழ்க்கையைத் தூய்மையாக்கி, உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டுகிறது.
  5. அல்லாஹ் தன் அடியார்களைத் தூய்மைப்படுத்த விரும்புவது அவனது மகத்தான அன்பின் அடையாளம் – இது நம்மை நல்லறங்களில் உறுதியாக நிற்கத் தூண்டுகிறது.


📜 வசனம் 31-35 — சூரா அல்-அஹ்ஸாப்

31۞ وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
32يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
34وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
35إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
அல்-அஹ்ஸாப்குர்ஆன் பட்டியல்
73வசனம்
MedinanRevelation
33வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அஹ்ஸாப் 33

சூரா அல்-அஹ்ஸாப் வசனம் 33 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்)…

சூரா வசனம் 33/73 — சூரா அல்-அஹ்ஸாப் الأحزاب (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அஹ்ஸாப் கேள், சூரா அல்-அஹ்ஸாப் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அஹ்ஸாப் mp3, சூரா அல்-அஹ்ஸாப் pdf. வசனம் 31–35. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers