Wa minan naasi mai yujaadilu fil laahi bighairi `ilminw wa yattabi`u kullaa shaitaanim mareed
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
യാതൊരു അറിവുമില്ലാതെ അല്ലാഹുവിന്റെ കാര്യത്തില് തര്ക്കിക്കുകയും, ധിക്കാരിയായ ഏത് പിശാചിനെയും പിന്പറ്റുകയും ചെയ്യുന്ന ചിലര് മനുഷ്യരുടെ കൂട്ടത്തിലുണ്ട്.
مَرِيدٍ – இறைவனுக்கு மாறு செய்து, தீமையில் விடாப்பிடியாக இருக்கும் கலகக்கார ஷைத்தான்.
விளக்கம்:
மனிதர்களில் சிலர் அறிவில்லாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றி வாதம் செய்கிறார்கள். இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்து சந்தேகம் எழுப்பி, அல்லாஹ்வின் சக்தியைப் பற்றி தர்க்கிக்கிறார்கள். இவர்கள் தங்கள் அறியாமையின் காரணமாக, தீமையில் விடாப்பிடியாக இருக்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் – அதாவது தன் இறைவனுக்கு மாறு செய்து, அவனுடைய தூதர்களுக்கு எதிராகக் கலகம் செய்யும் ஷைத்தான்களையும், வழிகேட்டின் தலைவர்களையும் – பின்பற்றுகிறார்கள். இந்த ஷைத்தான்கள் அவர்களை வழிகேட்டில் ஆழ்த்தி, சத்தியத்திலிருந்து தூரமாக்குகிறார்கள்.
பயன்கள்:
அறிவில்லாமல், ஆதாரமில்லாமல் மார்க்க விஷயங்களில் வாதம் செய்வது கடுமையான குற்றமாகும். அறிவைத் தேடுவதும், ஆதாரத்தின் அடிப்படையில் பேசுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
ஷைத்தான்களைப் பின்பற்றுவதும், வழிகேட்டின் தலைவர்களைப் பின்பற்றுவதும் மனிதனை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்கி, நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
அல்லாஹ்வின் சக்தியில் சந்தேகம் கொள்ளாமல், அவனுடைய வல்லமையை உறுதியாக நம்ப வேண்டும். இறந்தவர்களை உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு மிக எளிதான காரியமாகும்.
நல்லறிவும், நேர்வழியும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன. எனவே, நாம் எப்போதும் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்டு, அவனுடைய தூதரின் வழியைப் பின்பற்ற வேண்டும்.
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.