ஹூத் · 52/123
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா ஹூத்
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ ۝٥٢
Wa yaa qawmis taghfiroo Rabbakum summa toobooo ilaihi yursilis samaaa`a `alaikum midraaranw wa yazidkum quwwatan ilaa quwwatikum wa laa tatawallaw mujrimeen
📖 தமிழில்
"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • استغفروا: உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.
  • توبوا إليه: அவன்பால் மீளுங்கள் (ஏக இறைவனை ஏற்று, இணைவைப்பை விட்டு விலகுங்கள்).
  • مدرارا: தொடர்ச்சியாக அதிகமாகப் பெய்யும் மழை.
  • قوة إلى قوتكم: உங்கள் தற்போதைய வலிமையுடன் கூடுதலான வலிமை.
  • لا تتولوا مجرمين: குற்றவாளிகளாக (இறைமறுப்பில் உறுதியாக) புறமுதுகிட்டு விடாதீர்கள்.

விளக்கம்:

நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) தம் சமூகத்தினரிடம் கூறினார்கள்: "என் சமூகத்தாரே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்கள் முந்தைய பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன்பால் உண்மையான மனம் திருந்தி மீளுங்கள்; இணைவைப்பு, சிலை வழிபாடு போன்றவற்றை விட்டு விலகி, அவன் ஒருவனையே வணங்குங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அவன் உங்களுக்கு தொடர்ச்சியாக அதிக மழையை அனுப்புவான்; அதனால் உங்கள் நிலங்கள் செழித்து, வளங்கள் பெருகும். மேலும், உங்கள் தற்போதைய வலிமையுடன் கூடுதலான வலிமையை உங்களுக்கு வழங்குவான்; சந்ததிகள் பெருகி, செல்வங்கள் அதிகரித்து, உடல் வலிமையும் மன உறுதியும் கூடும். நான் உங்களை அழைக்கும் நேர்வழியை விட்டு, குற்றவாளிகளாகப் புறமுதுகிட்டு விடாதீர்கள்; இறைமறுப்பிலும் பாவங்களிலும் உறுதியாக இருக்காதீர்கள்."

பயன்கள்:

  1. பாவமன்னிப்புக் கோருதலும், மனம் திருந்துதலும் இறைவனிடம் நெருங்குவதற்கான மிகச் சிறந்த வழிகள்; அவை உலக வாழ்வின் செழிப்புக்கும் காரணமாகின்றன.
  2. இறைவனிடம் மன்னிப்புக் கோருவதும், அவன்பால் மீள்வதும் வாழ்க்கையில் வளம், வலிமை, வெற்றி ஆகியவற்றை அதிகரிக்கின்றன.
  3. இறைவனின் கருணை மகத்தானது; அவன் தன் அடியார்கள் தவறுகளை உணர்ந்து மீளும்போது, அவர்களுக்கு அருளைப் பொழிகிறான்.
  4. பாவங்களில் தொடர்ந்து இருப்பதும், நல்லுபதேசத்தைப் புறக்கணிப்பதும் அழிவுக்குக் காரணமாகும்; எனவே நல்லறிவுரைகளை ஏற்று நடப்பது வெற்றிக்கு வழி.


📜 வசனம் 50-54 — சூரா ஹூத்

50وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ إِنْ أَنتُمْ إِلَّا مُفْتَرُونَ
ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
51يَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى الَّذِي فَطَرَنِي ۚ أَفَلَا تَعْقِلُونَ
"என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
52وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ
"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).
53قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِي آلِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ
(அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.
54إِن نَّقُولُ إِلَّا اعْتَرَاكَ بَعْضُ آلِهَتِنَا بِسُوءٍ ۗ قَالَ إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُوا أَنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ
"எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.
ஹூத்குர்ஆன் பட்டியல்
123வசனம்
MeccanRevelation
52வசனம்

மொழிபெயர்ப்பு — ஹூத் 52

சூரா ஹூத் வசனம் 52 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா…

சூரா வசனம் 52/123 — சூரா ஹூத் هود (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஹூத் கேள், சூரா ஹூத் மொழிபெயர்ப்பு, சூரா ஹூத் mp3, சூரா ஹூத் pdf. வசனம் 50–54. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers