Wa Huwal lazee maddal arda wa ja`ala feehaa rawaasiya wa anhaaraa; wa min kullis samaraati ja`ala feehaa zawjainis yaini Yughshil lailan nahaar; inna fee zaalika la aayaatil liqawminy yatafakkaroon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അവനാണ് ഭൂമിയെ വിശാലമാക്കുകയും, അതില് ഉറച്ചുനില്ക്കുന്ന പര്വ്വതങ്ങളും നദികളും ഉണ്ടാക്കുകയും ചെയ്തവന്. എല്ലാ ഫലവര്ഗങ്ങളില് നിന്നും അവനതില് ഈ രണ്ട് ഇണകളെ ഉണ്ടാക്കിയിരിക്കുന്നു. അവന് രാത്രിയെക്കൊണ്ട് പകലിനെ മൂടുന്നു. തീര്ച്ചയായും അതില് ചിന്തിക്കുന്ന ജനങ്ങള്ക്ക് ദൃഷ്ടാന്തങ്ങളുണ്ട്.
ஸவ்ஜைன் இத்னைன்: இரண்டு இரண்டாக ஜோடிகள் (இனங்கள்).
யுக்ஷில் லைலன் நஹார்: இரவு பகலை மூடுகிறது (இரவு பகலின் மீது வந்து மூடுகிறது).
விளக்கம்:
அல்லாஹ்வே பூமியை விரித்து பரப்பி, அதை வாழ்வதற்கு ஏற்றதாக ஆக்கினான். அதில் மலைகளை நிலைநிறுத்தினான்; அவை பூமியை அசைக்காமல் உறுதியாக வைத்திருக்கின்றன. மேலும், மனிதர்கள், விலங்குகள், பயிர்கள் அனைத்திற்கும் நீர் புகட்ட ஆறுகளை ஓடச் செய்தான். பூமியில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் இரண்டிரண்டு இனங்களைப் படைத்தான் – இனிப்பு, புளிப்பு, வெள்ளை, கருப்பு போன்ற வேறுபாடுகளுடன். பின்னர் இரவைப் பகலின் மீது போர்த்துகிறான்; அப்போது ஒளிமயமான நேரம் இருளாக மாறுகிறது. இவை அனைத்திலும் சிந்தித்து சிந்தனை செய்யும் மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை நிரூபிக்கும் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. இவற்றைக் கவனித்து, படைப்பாளனின் மகத்துவத்தை உணர்ந்து அவனை வணங்குபவர்களே உண்மையான அறிவுடையோர்.
பயன்கள்:
இந்தப் பூமியின் அமைப்பும், அதில் உள்ள மலைகள், ஆறுகள், பல்வேறு கனிவர்க்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கருணையின் அடையாளங்கள். இவற்றைச் சிந்திப்பது இறைநம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
இரவும் பகலும் மாறி மாறி வருவது அல்லாஹ்வின் ஒழுங்குமுறையின் அற்புதம்; இது நமக்கு நேரத்தைக் கணக்கிடவும், ஓய்வு எடுக்கவும் உதவுகிறது.
இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் சிந்தனைக்கு அழைப்பு விடுக்கிறது; சிந்திப்பவர்களுக்கே உண்மை புலப்படும்.
பூமியில் உள்ள அனைத்தும் மனிதனின் நலனுக்காகப் படைக்கப்பட்டுள்ளன; இது அல்லாஹ்வின் அன்பையும் பரிவையும் காட்டுகிறது. இதை உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகவும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், "நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.