அல்-பகரா · 238/286
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-பகரா
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ۝٢٣٨
Haafizoo `alas salawaati was Salaatil Wustaa wa qoomoo lillaahi qaaniteen
📖 தமிழில்
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • حَافِظُوا: தொடர்ந்து கடைப்பிடியுங்கள், பேணுங்கள்.
  • الصَّلَوَاتِ: கடமையான ஐவேளை தொழுகைகள்.
  • الْوُسْطَى: நடுத்தரமானது (மத்தியில் உள்ளது).
  • قَانِتِينَ: அடிபணிந்து, பணிவுடன், மனத்தூய்மையுடன் (குனூத் செய்பவர்களாக).

விளக்கம்:

முஸ்லிம்களே! உங்கள் மீது கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகளை அவற்றின் குறிப்பிட்ட நேரங்களில், அவற்றின் நிபந்தனைகள், கடமைகள் (ருக்ன்), கட்டாயச் செயல்கள் (வாஜிப்) ஆகிய அனைத்தையும் முழுமையாகப் பேணி, தொடர்ச்சியாக நிறைவேற்றுங்கள். குறிப்பாக, மத்தியில் உள்ள தொழுகையாகிய அஸ்ர் தொழுகையை (மத்திய தொழுகை) மிகக் கவனமாகப் பேணுங்கள்; ஏனெனில் அது சிறப்பு வாய்ந்தது. மேலும், உங்கள் தொழுகையில் அல்லாஹ்வுக்காக நின்று, அவன்முன் முழு அடக்கத்துடனும், பணிவுடனும், உள்ளச்சத்துடனும் (குஷூவுடன்) நில்லுங்கள். தொழுகையில் கவனச்சிதறல் இல்லாமல், உள்ளம் அல்லாஹ்விடம் முழுமையாக இணைந்திருக்க வேண்டும்.


பயன்கள்:

  1. தொழுகையைப் பேணுவது இறைநம்பிக்கையின் அடையாளம்; இது முஸ்லிமின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது.
  2. அஸ்ர் தொழுகைக்கு சிறப்புக் கவனம் செலுத்துவது, வேலைகளின் நடுவே அல்லாஹ்வை நினைவுகூர்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
  3. தொழுகையில் அடக்கமும் பணிவும் (குஷூ) இருந்தால், அது இதயத்தைத் தூய்மைப்படுத்தி, பாவங்களிலிருந்து பாதுகாக்கிறது.
  4. இந்தக் கட்டளை முஸ்லிம்களுக்கு நேரத்தை மதிக்கவும், ஒழுக்கத்துடன் வாழவும் கற்றுக்கொடுக்கிறது.
  5. தொழுகையைப் பேணுவது மறுமையில் வெற்றிக்கான திறவுகோல்; இது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும்.


📜 வசனம் 236-240 — சூரா அல்-பகரா

236لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
237وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ۚ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
238حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
239فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا ۖ فَإِذَا أَمِنتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
240وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِّأَزْوَاجِهِم مَّتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
அல்-பகராகுர்ஆன் பட்டியல்
286வசனம்
MedinanRevelation
238வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-பகரா 238

சூரா அல்-பகரா வசனம் 238 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

சூரா வசனம் 238/286 — சூரா அல்-பகரா البقرة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-பகரா கேள், சூரா அல்-பகரா மொழிபெயர்ப்பு, சூரா அல்-பகரா mp3, சூரா அல்-பகரா pdf. வசனம் 236–240. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, September 8, 2026

Don't forget us in your sincere prayers