Wa iz qaala Moosa liqawmihee yaa qawmi lima tu`zoonanee wa qat ta`lamoona annee Rasoolul laahi ilaikum falammaa zaaghooo azaaghal laahu quloobahum; wallaahu laa yahdil qawmal faasiqeen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்; "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
മൂസാ തന്റെ ജനതയോട് ഇപ്രകാരം പറഞ്ഞ സന്ദര്ഭം (ശ്രദ്ധേയമാകുന്നു:) എന്റെ ജനങ്ങളേ, നിങ്ങള് എന്തിനാണ് എന്നെ ഉപദ്രവിക്കുന്നത്? ഞാന് നിങ്ങളിലേക്കുള്ള അല്ലാഹുവിന്റെ ദൂതനാണെന്ന് നിങ്ങള്ക്കറിയാമല്ലോ. അങ്ങനെ അവര് തെറ്റിയപ്പോള് അല്ലാഹു അവരുടെ ഹൃദയങ്ങളെ തെറ്റിച്ചുകളഞ്ഞു. അല്ലാഹു ദുര്മാര്ഗികളായ ജനങ്ങളെ നേര്വഴിയിലാക്കുകയില്ല.
* زَاغُوا (ஸாகூ): வழிகேட்டை நோக்கி சாய்ந்து, சத்தியத்தை விட்டு விலகிச் சென்றார்கள்.
* أَزَاغَ (அஸாக): (அல்லாஹ்) அவர்களுடைய இதயங்களை சத்தியத்தை ஏற்க முடியாதவாறு திருப்பிவிட்டான்.
* الْفَاسِقِينَ (அல்ஃபாஸிகீன்): அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றம் செய்து, அவனுடைய வரம்புகளை மீறும் மக்கள்.
விளக்கம்:
(நபியே!) மூசா (அலை) அவர்கள் தம் சமூகத்தினரிடம் கூறிய நேரத்தை நினைவூட்டுவீராக: “என் சமூகத்தாரே! நான் உங்களிடம் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் அறிந்திருந்தும், ஏன் எனக்குத் துன்பம் கொடுக்கிறீர்கள்? ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அவரைப் பழித்துரைத்தும், அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தும் துன்புறுத்தினார்கள். அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும், அதிலிருந்து விலகி வழிகேட்டைத் தேர்ந்தெடுத்தபோது, அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை சத்தியத்தை ஏற்க முடியாதவாறு திருப்பிவிட்டான். இது அவர்களுடைய தவறான தேர்வுக்கான தண்டனையாகும். நிச்சயமாக அல்லாஹ், தன் கட்டளைகளை மீறி, பாவத்தில் நிலைத்திருக்கும் மக்களை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
பயன்கள்:
அல்லாஹ்வின் தூதர்களுக்குத் துன்பம் கொடுப்பது பெரும் பாவமாகும். அவர்களை மதித்து நடப்பது கடமையாகும்.
சத்தியத்தை அறிந்த பிறகும் அதைப் புறக்கணிப்பது, இதயத்தின் நேர்வழியை இழக்கக் காரணமாக அமைந்துவிடும்.
அல்லாஹ்வின் தண்டனை உடனடியாக இருக்க வேண்டியதில்லை; ஒருவனின் இதயத்தைச் சத்தியத்தை ஏற்க முடியாதவாறு மாற்றிவிடுவதும் அவனுடைய தண்டனைகளில் ஒன்றாகும்.
பாவம் செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்காது என்பதை உணர்ந்து, அவனுடைய கட்டளைகளுக்கு மாற்றம் செய்வதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.
இறைத்தூதர்களின் அனுபவங்கள் நமக்கு படிப்பினையாக அமைகின்றன; அவர்களுடைய சமூகங்களின் தவறுகளை நாம் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்; "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்; "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.