அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അദ്ദേഹം പറഞ്ഞു: തീര്ച്ചയായും നിങ്ങള് അവനെ എന്റെ അടുക്കല് കൊണ്ട് വന്നുതരുമെന്ന് അല്ലാഹുവിന്റെ പേരില് എനിക്ക് ഉറപ്പ് നല്കുന്നത് വരെ ഞാനവനെ നിങ്ങളുടെ കുടെ അയക്കുകയില്ല തന്നെ. നിങ്ങള് (ആപത്തുകളാല്) വലയം ചെയ്യപ്പെടുന്നുവെങ്കില് ഒഴികെ. അങ്ങനെ അവരുടെ ഉറപ്പ് അദ്ദേഹത്തിന് അവര് നല്കിയപ്പോള് അദ്ദേഹം പറഞ്ഞു: അല്ലാഹു നാം പറയുന്നതിന് മേല്നോട്ടം വഹിക്കുന്നവനാകുന്നു.
அஹாத பிகும் (أحاط بكم): உங்களைச் சூழ்ந்து கொள்ளுதல், அதாவது உங்கள் அனைவரையும் அழிவு சூழ்ந்து கொள்ளுதல் அல்லது உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுதல்.
இந்த வசனத்தில், நபி யஅகூப் (அலை) அவர்கள் தம் மகன்களிடம் பின்வருமாறு கூறுகிறார்கள்: "நான் என் அன்பு மகன் பின்யாமீனை உங்களுடன் அனுப்ப மாட்டேன். அவனை என்னிடம் திரும்பக் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி அளித்தால் மட்டுமே நான் அவனை உங்களுடன் அனுப்புவேன். ஆனால், உங்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு, உங்களால் அவனைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டால் தவிர, நீங்கள் அவனை என்னிடம் திருப்பிக் கொண்டு வர வேண்டும்."
முந்தைய அனுபவத்தில் யூசுப் (அலை) அவர்களை இழந்த யஅகூப் (அலை) அவர்கள், இப்போது பின்யாமீனையும் இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், தம் மகன்களிடம் இந்தக் கடுமையான உறுதிமொழியைக் கோருகிறார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து, பின்யாமீனைத் திரும்பக் கொண்டு வருவதாக உறுதிமொழி அளித்தபோது, யஅகூப் (அலை) அவர்கள் கூறினார்கள்: "நாம் கூறும் இந்த வாக்குறுதிக்கு அல்லாஹ்வே சாட்சி மற்றும் பொறுப்பாளன். அவனே நம் வாக்குறுதியைப் பாதுகாப்பவன்."
இந்த வசனத்திலிருந்து பெறும் பயன்கள்:
முக்கியமான விஷயங்களில் உறுதிமொழியும் சத்தியமும் தேவை என்பதை இது காட்டுகிறது. நம்பிக்கைக்குரியவர்களிடம் கூட, முக்கியமான விஷயங்களில் உறுதிமொழி பெறுவது தவறல்ல.
பெற்றோர் தம் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொள்வது இயற்கையானது. இது குடும்பப் பாசத்தின் அழகைக் காட்டுகிறது.
அல்லாஹ்வை சாட்சியாக வைத்து வாக்குறுதி அளிப்பது என்பது மிக உயர்ந்த பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு முஸ்லிம் தான் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அல்லாஹ்வை நம்பி, அவனிடமே பொறுப்பை ஒப்படைப்பது (தவக்குல்) ஒரு முஃமினின் பண்பாகும். யஅகூப் (அலை) அவர்கள் "அல்லாஹ்வே பொறுப்பாளன்" என்று கூறியது இதைத்தான் காட்டுகிறது.
சிரமங்களிலும் சோதனைகளிலும் அல்லாஹ்வின் உதவியை நாடி, அவனிடமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்குக் கற்பிக்கிறது.
அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
(பின்னும்) அவர், "என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெள; வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" என்று கூறினார்.
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.