وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا ٢١
🔤 Transliteration
Wa kaifa taakhuzoonahoo wa qad afdaa ba`dukum ilaa ba`dinw wa akhazna minkum meesaaqan ghaleezaa
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
🌐 Additional reference in മലയാളം
சொற்பொருள் விளக்கம்:
- أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ – இது திருமண உறவு (உடலுறவு) நிகழ்வதைக் குறிக்கும் மரியாதையான குறியீட்டுச் சொல்லாகும்.
- مِيثَاقًا غَلِيظًا – உறுதியான, வலுவான, மிகப் பலமான உடன்படிக்கை.
விளக்கம்:
இந்த இறைவசனத்தில், திருமணமான ஆண்கள் தம் மனைவிகளுக்குக் கொடுத்த மஹ்ரை (திருமணப் பரிசை) மீண்டும் எடுத்துக்கொள்வது எவ்வாறு நியாயமாகும் என்று இறைவன் கேள்வி எழுப்புகிறான். ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவைப் பகிர்ந்துள்ளனர்; அவர்களிடையே அன்பும் பாசமும், இரகசியங்களும் பரிமாறப்பட்டுள்ளன. இத்தகைய நெருக்கமான உறவுக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட மஹ்ரை மீட்பது முற்றிலும் நியாயமற்றதும், வெட்கக்கேடானதுமான செயலாகும்.
மேலும், திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல; அது இறைவனின் பெயரால் ஏற்படுத்தப்படும் புனிதமான உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையில், கணவன் மனைவியை நன்மையுடன் நடத்த வேண்டும் அல்லது மரியாதையுடன் விடுவிக்க வேண்டும் என்ற வலுவான வாக்குறுதி உள்ளது. இந்தப் புனிதமான உடன்படிக்கையை மீறி, மனைவியின் உரிமையான மஹ்ரை எடுப்பது இறைவனின் கட்டளையை மீறும் செயலாகும்.
பயன்பாடுகள் (படிப்பினைகள்):
- திருமணத்தின் புனிதத்தன்மை: திருமணம் என்பது இறைவனின் பெயரால் ஏற்படுத்தப்படும் மிக உறுதியான உடன்படிக்கை. அதை இலகுவாகக் கருதக்கூடாது.
- மனைவியின் உரிமைகளைப் பாதுகாத்தல்: மஹ்ர் என்பது மனைவியின் சொந்த உரிமை. அதை அவளிடமிருந்து பறிப்பது பெரும் அநீதியாகும்.
- நெருக்கமான உறவின் மதிப்பு: கணவன்-மனைவி இடையேயான நெருக்கம், அன்பு, பாசம் ஆகியவை மிக உயர்ந்த மதிப்புடையவை. அவற்றைப் பணத்திற்காக விற்றுவிடக்கூடாது.
- நீதியும் நேர்மையும்: இஸ்லாம் எல்லா விவகாரங்களிலும் நீதியையும் நேர்மையையும் கட்டளையிடுகிறது. குடும்ப விவகாரங்களில் கூட அநியாயம் செய்வதைத் தடுக்கிறது.
- இரக்கமும் கருணையும்: இந்த வசனம் மனைவியிடம் இரக்கத்துடனும் கருணையுடனும் நடந்துகொள்ளக் கற்றுக்கொடுக்கிறது. இது இஸ்லாத்தின் உயர்ந்த ஒழுக்க நெறிகளை வெளிப்படுத்துகிறது.
📜 வசனம் 19-23 — சூரா அன்-நிசா
19يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
20وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا ۚ أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
21وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
22وَلَا تَنكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُم مِّنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
23حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..
மொழிபெயர்ப்பு — அன்-நிசா 21
சூரா அன்-நிசா வசனம் 21 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று…
சூரா வசனம் 21/176 — சூரா அன்-நிசா النساء (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நிசா கேள், சூரா அன்-நிசா மொழிபெயர்ப்பு, சூரா அன்-நிசா mp3, சூரா அன்-நிசா pdf. வசனம் 19–23. தமிழில்: മലയാളം.