அல்-அன்பால் · 45/75
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அன்பால்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ۝٤٥
Yaaa aiyuhal lazeena aamanooo izaa laqeetum fi`atan fasbutoo wazkurul laaha kaseeral la`allakum tuflihoon
📖 தமிழில்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • فِئَةً – ஒரு கூட்டம், போரிட வந்த எதிரிகளின் குழு.
  • فَاثْبُتُوا – உறுதியாக நில்லுங்கள், பின்வாங்காதீர்கள்.
  • اذْكُرُوا اللهَ كَثِيرًا – அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள்.
  • لَعَلَّكُمْ تُفْلِحُونَ – நீங்கள் வெற்றி பெறுவதற்காக.

விளக்கம்:

நம்பிக்கையாளர்களே! போரில் உங்களை எதிர்க்க வந்த நிராகரிப்பாளர்களின் கூட்டத்தை நீங்கள் சந்திக்கும் போது, பயந்து ஓடிவிடாதீர்கள். உறுதியாக நின்று போராடுங்கள். அந்த நேரத்தில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்; அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஏனெனில், வெற்றியை வழங்குபவன் அல்லாஹ்வே. அவனிடம் உதவி கேளுங்கள். நீங்கள் அவனை நம்பி, அவனை நினைவு கூர்ந்து, அவனிடம் மன்றாடினால், அவன் உங்களுக்கு வெற்றியைத் தந்து, உங்கள் எதிரிகளை வெல்லச் செய்வான். இதன் மூலம் நீங்கள் வெற்றி பெற்று, உங்கள் நோக்கங்களை அடைவீர்கள்.


பயன்கள்:

  1. போர் நேரத்தில் உறுதியாக இருப்பது நம்பிக்கையாளர்களின் குணமாகும்; பின்வாங்குவது நிராகரிப்பின் அறிகுறியாகும்.
  2. போரின் போது அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வது வெற்றிக்கான திறவுகோலாகும்; ஏனெனில், வெற்றி அல்லாஹ்வின் கையில் உள்ளது.
  3. அல்லாஹ்வை நினைவு கூர்வது மனதில் தைரியத்தையும், உறுதியையும் ஏற்படுத்துகிறது; பயத்தை நீக்குகிறது.
  4. இந்த வசனம், போர் போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை மறக்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தை போதிக்கிறது.
  5. வெற்றி என்பது வீரர்களின் எண்ணிக்கையாலோ, ஆயுதங்களாலோ மட்டும் அல்ல; மாறாக அல்லாஹ்வின் உதவியால்தான் கிடைக்கிறது.


📜 வசனம் 43-47 — சூரா அல்-அன்பால்

43إِذْ يُرِيكَهُمُ اللَّهُ فِي مَنَامِكَ قَلِيلًا ۖ وَلَوْ أَرَاكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَلَٰكِنَّ اللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
44وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا ۗ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
45يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
46وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
47وَلَا تَكُونُوا كَالَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِم بَطَرًا وَرِئَاءَ النَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۚ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்துக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
அல்-அன்பால்குர்ஆன் பட்டியல்
75வசனம்
MedinanRevelation
45வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அன்பால் 45

சூரா அல்-அன்பால் வசனம் 45 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் -…

சூரா வசனம் 45/75 — சூரா அல்-அன்பால் الأنفال (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அன்பால் கேள், சூரா அல்-அன்பால் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அன்பால் mp3, சூரா அல்-அன்பால் pdf. வசனம் 43–47. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, September 8, 2026

Don't forget us in your sincere prayers