அல்-அன்பால் · 46/75
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அன்பால்
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ۝٤٦
Wa atee`ul laaha wa Rasoolahoo wa laa tanaaza`oo fatafshaloo wa tazhaba reehukum wasbiroo; innal laaha ma`as saabireen
📖 தமிழில்
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • تَنَازَعُوا – (ஒருவருக்கொருவர்) முரண்படுதல், கருத்து வேறுபாடு கொள்ளுதல்.
  • فَتَفْشَلُوا – தளர்ச்சியடைதல், கோழைத்தனமாகி பலவீனமடைதல்.
  • رِيحُكُمْ – உங்கள் வலிமை, அதிகாரம், வெற்றி, மேலோங்கிய நிலை. (அரபு மொழியில் 'காற்று' என்பது ஒருவரின் ஆட்சி/செல்வாக்கு நிலைத்திருப்பதற்கு உருவகமாகும்.)

விளக்கம்:

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். உங்கள் பேச்சு, செயல், மற்றும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். கருத்து வேறுபாடுகளால் ஒருவருக்கொருவர் முரண்படாதீர்கள். ஏனெனில், நீங்கள் முரண்பட்டால் உங்கள் உள்ளங்கள் பிளவுபட்டு, நீங்கள் தளர்ச்சியடைந்து, கோழைத்தனமாகி விடுவீர்கள். அப்போது உங்கள் வலிமையும், வெற்றியும், மேலோங்கிய நிலையும் போய்விடும். எதிரிகளைச் சந்திக்கும் போது பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் – அவர்களுக்கு உதவி, வெற்றி, மற்றும் ஆதரவு அளிப்பதன் மூலம். அல்லாஹ் யாருடன் இருக்கிறானோ அவனே வெற்றியாளன்.

பயன்கள்:

  1. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே ஒரு சமுதாயத்தின் வெற்றிக்கும் வலிமைக்கும் அடிப்படை.
  2. கருத்து வேறுபாடும், பிளவும் ஒரு சமுதாயத்தின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணமாகும். ஒற்றுமையே வெற்றியின் திறவுகோல்.
  3. பொறுமை என்பது முஸ்லிம்களின் மிகப்பெரிய ஆயுதம்; அதன் மூலம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
  4. அல்லாஹ் தன் பொறுமையாளர்களான அடியார்களை ஒருபோதும் கைவிடமாட்டான்; அவர்களுக்கு உதவி செய்வது அவனுடைய வாக்குறுதி.
  5. இந்த வசனம் நமக்கு கற்பிக்கும் பாடம்: சுயநலம், கருத்து வேறுபாடு ஆகியவற்றை விட்டு விலகி, அல்லாஹ்வின் கட்டளைக்கும், தூதரின் வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பட்டு, பொறுமையுடன் செயல்பட்டால், நாம் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும்.


📜 வசனம் 44-48 — சூரா அல்-அன்பால்

44وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا ۗ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
45يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
46وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
47وَلَا تَكُونُوا كَالَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِم بَطَرًا وَرِئَاءَ النَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۚ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்துக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
48وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنكُمْ إِنِّي أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ ۚ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, "இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!" என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, " மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்" என்று கூறினான்.
அல்-அன்பால்குர்ஆன் பட்டியல்
75வசனம்
MedinanRevelation
46வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அன்பால் 46

சூரா அல்-அன்பால் வசனம் 46 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்;…

சூரா வசனம் 46/75 — சூரா அல்-அன்பால் الأنفال (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அன்பால் கேள், சூரா அல்-அன்பால் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அன்பால் mp3, சூரா அல்-அன்பால் pdf. வசனம் 44–48. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers