Afaman zuyyina lahoo sooo`u `amalihee fara aahu hasanaa; fa innal laaha yudillu mai yashaaa`u wa yahdee mai yahaaa`u falaa tazhab nafsuka `alaihim hasaraat; innal laaha `aleemun bimaa yasna`oon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
എന്നാല് തന്റെ ദുഷ്പ്രവൃത്തികള് അലംകൃതമായി തോന്നിക്കപ്പെടുകയും, അങ്ങനെ അത് നല്ലതായി കാണുകയും ചെയ്തവന്റെ കാര്യമോ? അല്ലാഹു താന് ഉദ്ദേശിക്കുന്നവരെ വഴിപിഴപ്പിക്കുകയും താന് ഉദ്ദേശിക്കുന്നവരെ നേര്വഴിയിലാക്കുകയും ചെയ്യുന്നതാണ്. അതിനാല് അവരെപ്പറ്റിയുള്ള കൊടുംഖേദം നിമിത്തം നിന്റെ പ്രാണന് പോകാതിരിക്കട്ടെ. തീര്ച്ചയായും അല്ലാഹു അവര് പ്രവര്ത്തിക്കുന്നതിനെപ്പറ്റി അറിവുള്ളവനാകുന്നു.
زُيِّنَ لَهُ: அவனுக்கு அழகாக்கப்பட்டது / அலங்கரிக்கப்பட்டது.
سُوءُ عَمَلِهِ: அவனுடைய கெட்ட செயல்.
حَسَنًا: அழகானதாக / நல்லதாக.
حَسَرَاتٍ: மிகுந்த கவலைகள் / கைசேதங்கள் (ஒன்றை இழந்ததற்காக ஏற்படும் கடும் துக்கம்).
விளக்கம்:
இந்த வசனத்தில், தீய செயல்களைச் செய்து அவற்றை நல்லதாகக் கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான்: ஒருவனுக்கு அவனுடைய தீய செயல்கள் (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டு, அவன் அவற்றை நல்லதாகப் பார்ப்பானே — அவனுக்கும், அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டு நல்லதை நல்லதாகவும், கெட்டதை கெட்டதாகவும் பார்ப்பவனுக்கும் சமமா? நிச்சயமாக இவர்கள் இருவரும் சமமானவர்கள் அல்ல.
அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் விடுகிறான்; தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். இது அவனுடைய ஞானத்திற்கேற்ப நடைபெறுகிறது. இதில் யாரும் அவனைக் கட்டாயப்படுத்த முடியாது.
பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறான்: "இந்த வழிகேடர்களின் நிலை கண்டு நீங்கள் மிகுந்த கவலைப்பட்டு உங்கள் உயிரையே இழந்துவிடாதீர்கள். அவர்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கிறான். அவர்களுடைய தீய செயல்களுக்கு ஏற்ற தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்குவான்."
பயன்கள்:
ஒரு மனிதன் தன் தீய செயலை நல்லதாகக் கருதுவது ஷைத்தானின் சூழ்ச்சியின் விளைவு என்பதை அறிந்து, ஒவ்வொரு செயலையும் இஸ்லாத்தின் அளவுகோலில் சோதிக்க வேண்டும்.
நேர்வழியும் வழிகேடும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளன; எனவே நாம் நம் முயற்சியைச் செய்து, அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்க வேண்டும்.
மக்களின் நிலை கண்டு அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது கூடாது; நம் கடமையைச் செய்து, முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைக்க வேண்டும்.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவனுடைய நீதி தவறாது. இது ஒவ்வொரு முஃமினுக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.