ஆல்-இம்ரான் · 183/200
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா ஆல்-இம்ரான்
الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ عَهِدَ إِلَيْنَا أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ ۗ قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَادِقِينَ ۝١٨٣
Allazeena qaalooo innal laaha `ahida ilainaaa allaa nu`mina liRasoolin hatta yaa tiyanaa biqurbaanin taa kuluhun naar; qul qad jaaa`akum Rusulum min qablee bilbaiyinaati wa billazee qultum falima qataltumoohum in kuntum saadiqeen
📖 தமிழில்
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள்:

  • قُرْبَانٍ (குர்பான்): அல்லாஹ்விடம் நெருங்குவதற்காகக் காணிக்கையாக வழங்கப்படும் பொருள்.
  • تَأْكُلُهُ النَّارُ (தஃகுலுஹு ந்னார்): வானத்திலிருந்து இறங்கும் நெருப்பு அதை எரித்துவிடும்.

விளக்கம்:

இந்த வசனத்தில், நபி (ஸல்) அவர்களிடம் வந்த யூதர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் (பொய்யாக) கூறினார்கள்: "அல்லாஹ் எங்களிடம் வாக்குறுதி எடுத்துள்ளான்; ஒரு தூதர் எங்களிடம் வந்து, அவர் அல்லாஹ்விடம் நெருங்குவதற்காகக் காணிக்கை அளித்து, அதனை வானத்திலிருந்து இறங்கும் நெருப்பு எரித்துவிடும் அத்தாட்சியைக் காட்டும் வரை நாங்கள் அவரை நம்ப மாட்டோம்" என்று. இது அவர்கள் கூறிய பொய்யாகும்; அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டதாக அவர்கள் இட்டுக்கட்டினார்கள்.

இதற்கு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொல்கிறான்: "எனக்கு முன்னர் பல தூதர்கள் உங்களிடம் வந்தார்கள்; அவர்கள் தெளிவான அத்தாட்சிகளையும், நீங்கள் கூறும் குர்பானை நெருப்பு எரிப்பது போன்றவற்றையும் கொண்டு வந்தார்கள். அவ்வாறிருந்தும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?" என்று. அதாவது, உங்கள் முன்னோர்கள் அந்தத் தூதர்களைப் பொய்யாக்கி கொலை செய்தார்கள்; இது உங்கள் கூற்று பொய்யானது என்பதற்குத் தெளிவான சான்றாகும்.

பயன்கள்:

  1. அல்லாஹ்வின் மீது பொய்யான கூற்றுகளைச் சொல்வது மிகப்பெரிய குற்றமாகும்; யூதர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யான வாக்குறுதியை இட்டுக்கட்டியதால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.
  2. தூதர்களின் உண்மைத்தன்மைக்கு அத்தாட்சிகள் தேவை; ஆனால் ஒரே ஒரு அத்தாட்சியை மட்டும் நிபந்தனையாக வைப்பது தவறு; ஏனெனில் ஒவ்வொரு தூதரும் தமது காலத்திற்கேற்ப பல அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்.
  3. முந்தைய வேதங்களில் உள்ள உண்மையான போதனைகளைப் பின்பற்றுபவர்கள், நபி (ஸல்) அவர்களை நம்ப வேண்டும்; ஏனெனில் அவர்களின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. இஸ்லாத்தின் அழைப்பு தர்க்கரீதியானதும் நியாயமானதுமானது; எதிரிகள் கூறும் ஆட்சேபனைகளுக்கு தெளிவான பதில்களைக் கொண்டுள்ளது.
  5. உண்மையை ஏற்காதவர்கள், தங்கள் முன்னோர்களின் தவறான செயல்களுக்குப் பொறுப்பாளிகளாக மாட்டார்கள்; ஆனால் அவர்கள் அந்தத் தவறுகளைப் பின்பற்றினால் கண்டிக்கப்படுவார்கள்.


📜 வசனம் 181-185 — சூரா ஆல்-இம்ரான்

181لَّقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
182ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
183الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ عَهِدَ إِلَيْنَا أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ ۗ قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
184فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
185كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
ஆல்-இம்ரான்குர்ஆன் பட்டியல்
200வசனம்
MedinanRevelation
183வசனம்

மொழிபெயர்ப்பு — ஆல்-இம்ரான் 183

சூரா ஆல்-இம்ரான் வசனம் 183 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை…

சூரா வசனம் 183/200 — சூரா ஆல்-இம்ரான் آل عمران (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஆல்-இம்ரான் கேள், சூரா ஆல்-இம்ரான் மொழிபெயர்ப்பு, சூரா ஆல்-இம்ரான் mp3, சூரா ஆல்-இம்ரான் pdf. வசனம் 181–185. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, September 8, 2026

Don't forget us in your sincere prayers