Allazeena qaalooo innal laaha `ahida ilainaaa allaa nu`mina liRasoolin hatta yaa tiyanaa biqurbaanin taa kuluhun naar; qul qad jaaa`akum Rusulum min qablee bilbaiyinaati wa billazee qultum falima qataltumoohum in kuntum saadiqeen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ഞങ്ങളുടെ മുമ്പാകെ ഒരു ബലി നടത്തി അതിനെ ദിവ്യാഗ്നി തിന്നുകളയുന്നത് (ഞങ്ങള്ക്ക് കാണിച്ചുതരുന്നത്) വരെ ഒരു ദൈവദൂതനിലും ഞങ്ങള് വിശ്വസിക്കരുതെന്ന് അല്ലാഹു ഞങ്ങളോട് കരാറു വാങ്ങിയിട്ടുണ്ട് എന്ന് പറഞ്ഞവരത്രെ അവര്. (നബിയേ,) പറയുക: വ്യക്തമായ തെളിവുകള് സഹിതവും, നിങ്ങള് ഈ പറഞ്ഞത് സഹിതവും എനിക്ക് മുമ്പ് പല ദൂതന്മാരും നിങ്ങളുടെ അടുത്ത് വന്നിട്ടുണ്ട്. എന്നിട്ട് നിങ്ങളുടെ വാദം സത്യമാണെങ്കില് നിങ്ങളെന്തിന് അവരെ കൊന്നുകളഞ്ഞു?
قُرْبَانٍ (குர்பான்): அல்லாஹ்விடம் நெருங்குவதற்காகக் காணிக்கையாக வழங்கப்படும் பொருள்.
تَأْكُلُهُ النَّارُ (தஃகுலுஹு ந்னார்): வானத்திலிருந்து இறங்கும் நெருப்பு அதை எரித்துவிடும்.
விளக்கம்:
இந்த வசனத்தில், நபி (ஸல்) அவர்களிடம் வந்த யூதர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் (பொய்யாக) கூறினார்கள்: "அல்லாஹ் எங்களிடம் வாக்குறுதி எடுத்துள்ளான்; ஒரு தூதர் எங்களிடம் வந்து, அவர் அல்லாஹ்விடம் நெருங்குவதற்காகக் காணிக்கை அளித்து, அதனை வானத்திலிருந்து இறங்கும் நெருப்பு எரித்துவிடும் அத்தாட்சியைக் காட்டும் வரை நாங்கள் அவரை நம்ப மாட்டோம்" என்று. இது அவர்கள் கூறிய பொய்யாகும்; அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டதாக அவர்கள் இட்டுக்கட்டினார்கள்.
இதற்கு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொல்கிறான்: "எனக்கு முன்னர் பல தூதர்கள் உங்களிடம் வந்தார்கள்; அவர்கள் தெளிவான அத்தாட்சிகளையும், நீங்கள் கூறும் குர்பானை நெருப்பு எரிப்பது போன்றவற்றையும் கொண்டு வந்தார்கள். அவ்வாறிருந்தும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?" என்று. அதாவது, உங்கள் முன்னோர்கள் அந்தத் தூதர்களைப் பொய்யாக்கி கொலை செய்தார்கள்; இது உங்கள் கூற்று பொய்யானது என்பதற்குத் தெளிவான சான்றாகும்.
பயன்கள்:
அல்லாஹ்வின் மீது பொய்யான கூற்றுகளைச் சொல்வது மிகப்பெரிய குற்றமாகும்; யூதர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யான வாக்குறுதியை இட்டுக்கட்டியதால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.
தூதர்களின் உண்மைத்தன்மைக்கு அத்தாட்சிகள் தேவை; ஆனால் ஒரே ஒரு அத்தாட்சியை மட்டும் நிபந்தனையாக வைப்பது தவறு; ஏனெனில் ஒவ்வொரு தூதரும் தமது காலத்திற்கேற்ப பல அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்.
முந்தைய வேதங்களில் உள்ள உண்மையான போதனைகளைப் பின்பற்றுபவர்கள், நபி (ஸல்) அவர்களை நம்ப வேண்டும்; ஏனெனில் அவர்களின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் அழைப்பு தர்க்கரீதியானதும் நியாயமானதுமானது; எதிரிகள் கூறும் ஆட்சேபனைகளுக்கு தெளிவான பதில்களைக் கொண்டுள்ளது.
உண்மையை ஏற்காதவர்கள், தங்கள் முன்னோர்களின் தவறான செயல்களுக்குப் பொறுப்பாளிகளாக மாட்டார்கள்; ஆனால் அவர்கள் அந்தத் தவறுகளைப் பின்பற்றினால் கண்டிக்கப்படுவார்கள்.
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
சூரா ஆல்-இம்ரான் வசனம் 183 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை…
சூரா வசனம் 183/200 — சூரா ஆல்-இம்ரான் آل عمران (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஆல்-இம்ரான் கேள், சூரா ஆல்-இம்ரான் மொழிபெயர்ப்பு, சூரா ஆல்-இம்ரான் mp3, சூரா ஆல்-இம்ரான் pdf. வசனம் 181–185. தமிழில்: മലയാളം.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.