Wa in jaahadaaka `alaaa an tushrika bee maa laisa laka bihee `ilmun falaa tuti`humaa wa saahib humaa fid dunyaa ma`roofanw wattabi` sabeela man anaaba ilayy; summa ilaiya marji`ukum fa unabbi`ukum bimaa kuntum ta`maloon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
നിനക്ക് യാതൊരു അറിവുമില്ലാത്ത വല്ലതിനെയും എന്നോട് നീ പങ്കുചേര്ക്കുന്ന കാര്യത്തില് അവര് ഇരുവരും നിന്റെ മേല് നിര്ബന്ധം ചെലുത്തുന്ന പക്ഷം അവരെ നീ അനുസരിക്കരുത്. ഇഹലോകത്ത് നീ അവരോട് നല്ലനിലയില് സഹവസിക്കുകയും, എന്നിലേക്ക് മടങ്ങിയവരുടെ മാര്ഗം നീ പിന്തുടരുകയും ചെയ്യുക. പിന്നെ എന്റെ അടുത്തേക്കാകുന്നു നിങ്ങളുടെ മടക്കം. അപ്പോള് നിങ്ങള് പ്രവര്ത്തിച്ചിരുന്നതിനെപ്പറ്റി ഞാന് നിങ്ങളെ വിവരമറിയിക്കുന്നതാണ്.
"ஜாஹதா" (جَاهَدَا): இருவரும் (பெற்றோர்) முயற்சி செய்து வற்புறுத்துதல்.
"அனாப" (أَنَابَ): மனம் திருந்தி, முற்றிலும் இறைவனை நோக்கித் திரும்புதல்.
"மர்ஜிஉ" (مَرْجِع): திரும்பிச் செல்லும் இடம்.
"உனப்பிஉ" (أُنَبِّئُ): அறிவிப்பேன், தெரிவிப்பேன்.
விளக்கம்:
நம்பிக்கையாளரான மகனே! உன் பெற்றோர் இருவரும் உன்னை அழுத்தம் கொடுத்து, என்னுடன் வேறு எதையும் இணைத்து வணங்கும்படி வற்புறுத்தினால்—அதற்கு உனக்கு எந்த அறிவார்ந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிவாய்—அப்போது அவர்களுக்குக் கீழ்ப்படியாதே. ஏனெனில், படைப்பாளனுக்கு மாற்றமாக எந்தப் படைப்புக்கும் கீழ்ப்படிதல் இல்லை. ஆனால், இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுடன் நன்மையான முறையில் பழகு; அவர்களுக்கு உதவி செய், அவர்களின் தேவைகளை நிறைவேற்று, அவர்களிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்—ஆனால் எந்தப் பாவச் செயலுக்கும் அவர்களுக்குக் கீழ்ப்படியாதே.
மேலும், என்னை நோக்கி மனம் திருந்தியவர்களின் பாதையைப் பின்பற்று—அதாவது, ஏகத்துவத்தை ஏற்று, எனக்குக் கீழ்ப்படிந்து, நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது நம்பிக்கை கொண்டவர்களின் வழியைப் பின்பற்று. ஏனெனில், இறுதியில் உங்கள் அனைவரின் மறுமை நாளில் என்னிடமே திரும்பி வர வேண்டும். அப்போது, நீங்கள் இவ்வுலகில் செய்த அனைத்து நற்செயல்களுக்கும் தீயசெயல்களுக்கும் ஏற்ப உங்களுக்கு முழுமையான பலனை அறிவித்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ற கூலியை வழங்குவேன்.
பயன்கள்:
இறைவனுக்கு இணை வைப்பது (ஷிர்க்) மிகப்பெரிய பாவம்; அதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது—பெற்றோர் வற்புறுத்தினாலும் கூட.
பெற்றோருக்கு கீழ்ப்படிதல் கட்டாயம்; ஆனால் இறைவனுக்கு மாற்றமான கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படியக்கூடாது. இது இஸ்லாத்தின் நியாயமான நிலைப்பாடு.
பெற்றோர் இறைமறுப்பாளர்களாக இருந்தாலும், அவர்களுடன் நன்மையாகவும் அன்பாகவும் பழக வேண்டும்—இது இஸ்லாம் கற்றுத்தரும் உயர்ந்த பண்பாடு.
நல்லவர்களின் வழியைப் பின்பற்றுவதே வெற்றிக்கான பாதை; மனம் திருந்தி இறைவனை நோக்கித் திரும்புபவர்களுக்கு இறைவன் நிச்சயம் வழிகாட்டுவான்.
மறுமை நாளில் அனைவரும் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டும்; அங்கு ஒவ்வொருவரின் செயல்களுக்கும் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும். இந்த நம்பிக்கை மனிதனை நல்ல செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
"என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக் நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.