Yureedul laahu liyubai yina lakum wa yahdiyakum sunanal lazeena min qablikum wa yatooba `alaikum; wallaahu `Aleemun Hakeem
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
നിങ്ങള്ക്ക് (കാര്യങ്ങള്) വിവരിച്ചുതരുവാനും, നിങ്ങളുടെ മുന്ഗാമികളുടെ നല്ല നടപടികള് നിങ്ങള്ക്ക് കാട്ടിത്തരുവാനും നിങ്ങളുടെ പശ്ചാത്താപം സ്വീകരിക്കുവാനും, അല്ലാഹു ഉദ്ദേശിക്കുന്നു. അല്ലാഹു എല്ലാം അറിയുന്നവനും യുക്തിമാനുമാകുന്നു.
يَتُوبَ عَلَيْكُمْ: உங்கள் மீது கருணை காட்டி, பாவமன்னிப்பு அளித்து, நல்ல பாதைக்கு உங்களைத் திருப்புவது.
عَلِيمٌ: அனைத்தையும் அறிந்தவன்.
حَكِيمٌ: மிக்க ஞானமுள்ளவன்.
விளக்கம்:
அல்லாஹ் உங்களுக்காக இந்தச் சட்டங்களை விதித்திருப்பதன் நோக்கம், உங்களுக்கு அவனது மார்க்கத்தின் நெறிமுறைகளைத் தெளிவுபடுத்துவதும், உங்களுக்கு முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் வழிமுறைகளை (ஹலால்-ஹராம் விதிகளில்) உங்களுக்கு அறிவித்து, அதன்படி நடக்க உங்களை வழிநடத்துவதும் ஆகும். மேலும், உங்கள் பாவங்களை மன்னித்து, அவன்பக்கம் திரும்பும் பாக்கியத்தை உங்களுக்கு வழங்குவதும் அவனது நோக்கமாகும். நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கு அறிந்தவன்; அவர்களுக்கு எது சிறந்ததோ அதையே சட்டமாக விதிக்கிறான். அவன் விதிக்கும் ஒவ்வொரு சட்டத்திலும் மிக்க ஞானம் இருக்கிறது.
பயன்கள்:
அல்லாஹ்வின் சட்டங்கள் அனைத்தும் மனிதர்களின் நலனுக்காகவே விதிக்கப்பட்டவை; அவற்றில் எந்தக் கஷ்டமும் இல்லை.
இஸ்லாமிய சட்டங்கள் புதியவை அல்ல; முந்தைய நபிமார்களின் வழிமுறைகளுடன் ஒத்துப்போகின்றன, இது மார்க்கத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.
அல்லாஹ் நம்மீது மிகுந்த கருணை கொண்டுள்ளான்; அவன் நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக நம்மைத் திருத்தி நல்ல பாதையில் நடத்துவதற்காகவே சட்டங்களை விதிக்கிறான்.
அல்லாஹ்வின் ஞானமும் அறிவும் மிகப் பெரியவை; அவன் விதிக்கும் ஒவ்வொரு விதியிலும் நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளன.
பாவங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் திருந்திச் செல்லும் வாய்ப்பு எப்போதும் உள்ளது; அவன் மன்னிப்பவன், கருணையாளன்.
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;. ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
சூரா அன்-நிசா வசனம் 26 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள்…
சூரா வசனம் 26/176 — சூரா அன்-நிசா النساء (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நிசா கேள், சூரா அன்-நிசா மொழிபெயர்ப்பு, சூரா அன்-நிசா mp3, சூரா அன்-நிசா pdf. வசனம் 24–28. தமிழில்: മലയാളം.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.