Qaala qad waqa`a alaikum mir Rabbikum rijsunw wa ghadab, atujaadiloonanee feee asmaaa`in sammaitumoohaaa antum wa aabaaa`ukum maa nazzalal laahu bihaa min sultaan; fantazirooo innee ma`akum minal muntazireen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ഹൂദ് പറഞ്ഞു: തീര്ച്ചയായും നിങ്ങളുടെ രക്ഷിതാവിങ്കല് നിന്നുള്ള ശിക്ഷയും കോപവും (ഇതാ) നിങ്ങള്ക്ക് വന്നുഭവിക്കുകയായി. നിങ്ങളും നിങ്ങളുടെ പിതാക്കന്മാരും പേരിട്ടുവെച്ചിട്ടുള്ളതും, അല്ലാഹു യാതൊരു പ്രമാണവും അവതരിപ്പിച്ചിട്ടില്ലാത്തതുമായ ചില (ദൈവ) നാമങ്ങളുടെ പേരിലാണോ നിങ്ങളെന്നോട് തര്ക്കിക്കുന്നത്? എന്നാല് നിങ്ങള് കാത്തിരുന്ന് കൊള്ളുക. തീര്ച്ചയായും ഞാനും നിങ്ങളോടൊപ്പം കാത്തിരിക്കുകയാണ്.
இறைத்தூதர் ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) தம் சமூகத்தினருக்கு பதிலளித்துக் கூறினார்: "உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது வேதனையும் கோபமும் இறங்கிவிட்டன. அது உங்களைத் தவிர்க்க முடியாது. நீங்கள் உங்கள் முன்னோர்களுடன் சேர்ந்து சில சிலைகளுக்கு 'கடவுள்கள்' என்று பெயரிட்டு, அவற்றை வணங்குகிறீர்கள். ஆனால் அவை உண்மையில் கடவுள்கள் அல்ல; அவை வெறும் பெயர்களே! அவை உங்களுக்கு எந்த நன்மையோ தீமையோ செய்யும் சக்தி இல்லாதவை. இவை கடவுள்கள் என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. நீங்கள் என்னிடம் வீண் விவாதம் செய்கிறீர்களா? நீங்கள் வேதனையை அவசரப்படுத்திக் கேட்கிறீர்களே, அப்படியானால் அதை எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களுடன் அதை எதிர்பார்த்திருப்பவர்களில் ஒருவனாக இருக்கிறேன்." இது மிகக் கடுமையான எச்சரிக்கையும் அச்சுறுத்தலுமாகும்.
பயன்பாடுகள் (சிந்தனைகள்):
இறைவனின் வேதனை அவனது நெருங்கிய நபிமார்களின் மூலம் எச்சரிக்கப்பட்ட பிறகும் மக்கள் மாறாதபோது, அது அவர்களுக்கு நிச்சயமாக வந்துசேரும் என்பதை இது உணர்த்துகிறது.
வெறும் பெயர்களும் மரபுகளும் மார்க்கத்தில் ஆதாரமாகாது; அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதர்களின் போதனைகளுமே உண்மையான ஆதாரங்கள்.
சிலைகள், பொருட்கள், அல்லது மனிதர்கள் எவரும் இறைவனின் பண்புகளைக் கொண்டிருக்க முடியாது; வணக்கத்திற்குரியவன் ஒருவனே — அல்லாஹ் மட்டுமே.
நபிமார்கள் உண்மையைச் சொல்லத் தயங்கவில்லை; அச்சுறுத்தல்களுக்கு பயந்து விட்டுக்கொடுக்கவில்லை. இது நமக்கு உறுதியான நிலைப்பாட்டின் முன்மாதிரி.
பொய்யின் மீது உறுதியாக இருப்பவர்கள் இறுதியில் தோல்வியடைவார்கள்; உண்மையின் மீது நிலைத்திருப்பவர்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பதை இந்த வரலாறு நமக்குக் கற்பிக்கிறது.
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)
அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.
சூரா அல்-அஆராஃப் வசனம் 71 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர்…
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.