Surah Al-Haqqah with Tamil

  1. Surah mp3
  2. More
  3. Tamil
The Holy Quran | Quran translation | Language Tamil | Surah Al-Haqqah | الحاقة - Ayat Count 52 - The number of the surah in moshaf: 69 - The meaning of the surah in English: The Sure Reality.

الْحَاقَّةُ(1)

 நிச்சயமானது.

مَا الْحَاقَّةُ(2)

 நிச்சயமானது எது?

وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ(3)

 அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ(4)

 ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ(5)

 எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ(6)

 இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ(7)

 அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ(8)

 ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ(9)

 அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً(10)

 அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ(11)

 தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ(12)

 அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ(13)

 எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً(14)

 இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ(15)

 அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ(16)

 வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ(17)

 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ(18)

 (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ(19)

 ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ(20)

 "நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ(21)

 ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -

فِي جَنَّةٍ عَالِيَةٍ(22)

 உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

قُطُوفُهَا دَانِيَةٌ(23)

 அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ(24)

 "சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ(25)

 ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ(26)

 "அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ(27)

 "(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ(28)

 "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ(29)

 "என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).

خُذُوهُ فَغُلُّوهُ(30)

 "(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ(31)

 "பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ(32)

 "பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ(33)

 "நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ(34)

 "அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ(35)

 "எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ(36)

 "சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ(37)

 "குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ(38)

 ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

وَمَا لَا تُبْصِرُونَ(39)

 நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ(40)

 நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ(41)

 இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ(42)

 (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ(43)

 அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ(44)

 அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -

لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ(45)

 அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ(46)

 பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ(47)

 அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ(48)

 ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ(49)

 ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ(50)

 அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ(51)

 மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ(52)

 ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.


More surahs in Tamil:


Al-Baqarah Al-'Imran An-Nisa'
Al-Ma'idah Yusuf Ibrahim
Al-Hijr Al-Kahf Maryam
Al-Hajj Al-Qasas Al-'Ankabut
As-Sajdah Ya Sin Ad-Dukhan
Al-Fath Al-Hujurat Qaf
An-Najm Ar-Rahman Al-Waqi'ah
Al-Hashr Al-Mulk Al-Haqqah
Al-Inshiqaq Al-A'la Al-Ghashiyah

Download surah Al-Haqqah with the voice of the most famous Quran reciters :

surah Al-Haqqah mp3 : choose the reciter to listen and download the chapter Al-Haqqah Complete with high quality
surah Al-Haqqah Ahmed El Agamy
Ahmed Al Ajmy
surah Al-Haqqah Bandar Balila
Bandar Balila
surah Al-Haqqah Khalid Al Jalil
Khalid Al Jalil
surah Al-Haqqah Saad Al Ghamdi
Saad Al Ghamdi
surah Al-Haqqah Saud Al Shuraim
Saud Al Shuraim
surah Al-Haqqah Abdul Basit Abdul Samad
Abdul Basit
surah Al-Haqqah Abdul Rashid Sufi
Abdul Rashid Sufi
surah Al-Haqqah Abdullah Basfar
Abdullah Basfar
surah Al-Haqqah Abdullah Awwad Al Juhani
Abdullah Al Juhani
surah Al-Haqqah Fares Abbad
Fares Abbad
surah Al-Haqqah Maher Al Muaiqly
Maher Al Muaiqly
surah Al-Haqqah Muhammad Siddiq Al Minshawi
Al Minshawi
surah Al-Haqqah Al Hosary
Al Hosary
surah Al-Haqqah Al-afasi
Mishari Al-afasi
surah Al-Haqqah Yasser Al Dosari
Yasser Al Dosari


Sunday, April 28, 2024

لا تنسنا من دعوة صالحة بظهر الغيب