Wa laa yahsabannal lazeena kafarooo annamaa numlee lahum khairulli anfusihim; innamaa numlee lahum liyazdaadooo ismaa wa lahum `azaabum muheen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
സത്യനിഷേധികള്ക്ക് നാം സമയം നീട്ടികൊടുക്കുന്നത് അവര്ക്ക് ഗുണകരമാണെന്ന് അവര് ഒരിക്കലും വിചാരിച്ചു പോകരുത്. അവരുടെ പാപം കൂടിക്കൊണ്ടിരിക്കാന് വേണ്ടി മാത്രമാണ് നാമവര്ക്ക് സമയം നീട്ടികൊടുക്കുന്നത്. അപമാനകരമായ ശിക്ഷയാണ് അവര്ക്കുള്ളത്.
நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) தங்களுக்கு நாம் அவகாசம் கொடுப்பதையும், உலக வாழ்க்கையில் செல்வங்களையும் ஆயுளையும் வழங்குவதையும் கண்டு, அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் இவ்வாறு எண்ணுவது முற்றிலும் தவறாகும். உண்மையில், நாம் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பதும், தண்டனையைத் தாமதப்படுத்துவதும் அவர்களுக்கு நன்மைக்காக அல்ல. மாறாக, அவர்கள் மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டு, அதிகமாக அநியாயம் செய்து, தங்கள் தண்டனையை அதிகரித்துக்கொள்ளத்தான் இந்த அவகாசம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இறுதியில் இழிவுபடுத்தும் வேதனை காத்திருக்கிறது. அந்த வேதனை அவர்களை முழுமையாக அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தும்.
பயன்கள்:
உலக வாழ்க்கையில் செல்வமும், ஆயுளும், வசதிகளும் கிடைப்பது எப்போதும் நன்மையின் அடையாளம் அல்ல. சில நேரங்களில் அது சோதனையாகவும், தண்டனையை அதிகரிக்கும் காரணமாகவும் இருக்கலாம்.
அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு அவகாசம் கொடுப்பது அவர்கள் மீதான கருணையால் அல்ல, மாறாக அவர்களின் பாவங்கள் அதிகரித்து, அவர்களுக்கு தண்டனை கடுமையாக வேண்டும் என்பதற்காகவே.
இந்த வாழ்க்கையின் இன்பங்களில் மயங்கி, மறுமையை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நிமிடமும் நமது செயல்களைக் கண்காணித்து, நல்லறங்களைச் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தண்டனை தவிர்க்க முடியாதது. அவன் எப்போது, எப்படி தண்டிப்பான் என்பதை யாரும் அறிய முடியாது. எனவே, அவனிடம் திரும்பி, பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வுலக வாழ்க்கை நிலையானது அல்ல. மறுமை வாழ்க்கையே நிலையானது. அங்கு வெற்றி பெறுவதற்காகவே நாம் இங்கு செயல்பட வேண்டும்.
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
"குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.