📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 595
சூரா அஷ்-ஷம்ஸ்
bismillah
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا  ۝١ وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا  ۝٢ وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا  ۝٣ وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا  ۝٤ وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا  ۝٥ وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا  ۝٦ وَنَفۡسٍ وَمَا سَوَّىٰهَا  ۝٧ فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا  ۝٨ قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا  ۝٩ وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا  ۝١٠ كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ  ۝١١ إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا  ۝١٢ فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا  ۝١٣ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا  ۝١٤ وَلَا يَخَافُ عُقۡبَٰهَا  ۝١٥
சூரா அல்-லைல்
bismillah
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ  ۝١ وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ  ۝٢ وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ  ۝٣ إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ  ۝٤ فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ  ۝٥ وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ  ۝٦ فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ  ۝٧ وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ  ۝٨ وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ  ۝٩ فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ  ۝١٠ وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ  ۝١١ إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ  ۝١٢ وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ  ۝١٣ فَأَنذَرۡتُكُمۡ نَارًا تَلَظَّىٰ  ۝١٤
சூரா அஷ்-ஷம்ஸ்
bismillah
91:1
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا  ۝١
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
91:2
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا  ۝٢
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا  ۝٣
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا  ۝٤
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا  ۝٥
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا  ۝٦
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7
وَنَفۡسٍ وَمَا سَوَّىٰهَا  ۝٧
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:8
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا  ۝٨
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:9
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا  ۝٩
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:10
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا  ۝١٠
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:11
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ  ۝١١
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:12
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا  ۝١٢
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:13
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا  ۝١٣
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
91:14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا  ۝١٤
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:15
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا  ۝١٥
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
சூரா அல்-லைல்
bismillah
92:1
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ  ۝١
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
92:2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ  ۝٢
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ  ۝٣
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:4
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ  ۝٤
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:5
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ  ۝٥
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:6
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ  ۝٦
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:7
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ  ۝٧
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ  ۝٨
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:9
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ  ۝٩
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:10
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ  ۝١٠
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:11
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ  ۝١١
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:12
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ  ۝١٢
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:13
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ  ۝١٣
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:14
فَأَنذَرۡتُكُمۡ نَارًا تَلَظَّىٰ  ۝١٤
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.


📚Juz 30 📄595 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers