யூசுப் · 64/111
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா யூசுப்
قَالَ هَلْ آمَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَا أَمِنتُكُمْ عَلَىٰ أَخِيهِ مِن قَبْلُ ۖ فَاللَّهُ خَيْرٌ حَافِظًا ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ ۝٦٤
Qaala hal aamanukum `alihi illaa kamaa amintukum `alaaa akheehimin qabl; fal laahu khairun haafizanw wa Huwa arhamur Raahimeen
📖 தமிழில்
அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • آمَنُكُمْ عَلَيْهِ – உங்களை அவர் மீது நம்பிக்கை வைப்பவனாக ஆக்கட்டுமா? அதாவது, "அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கட்டுமா?"
  • حَافِظًا – பாதுகாப்பவன், காப்பவன்.
  • أَرْحَمُ الرَّاحِمِينَ – கருணையாளர்களிலெல்லாம் மிக்க கருணையுள்ளவன்.

விளக்கம்:

யாகூப் நபி (அலை) அவர்கள் தம் மகன்களிடம் கூறினார்கள்: "பின்யாமீனை உங்களிடம் ஒப்படைப்பது எப்படி நம்பிக்கைக்குரியதாக இருக்க முடியும்? இதற்கு முன் அவனது சகோதரன் யூசுஃபை உங்களிடம் ஒப்படைத்தேன். அப்போது நீங்கள் அவனைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; அவனை இழந்து விட்டீர்கள். எனவே, உங்கள் பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், அல்லாஹ்வின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை வைக்கிறேன். ஏனெனில், அல்லாஹ் பாதுகாப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த பாதுகாவலன். அவன் நாடியவர்களை எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான். மேலும், அவன் கருணையாளர்களிலெல்லாம் மிக்க கருணையுள்ளவன். அவன் என்மீது கருணை காட்டி, என் மகனை எனக்குத் திருப்பித் தருவான் என்று நான் நம்புகிறேன்."

பயன்கள்:

  1. அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. மனிதர்களின் வாக்குறுதிகளை விட அல்லாஹ்வின் பாதுகாப்பே மேலானது.
  2. கடினமான சூழ்நிலைகளில் அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்ப்பதும், அவனிடமே முறையிடுவதும் நம்பிக்கையாளரின் பண்பாகும்.
  3. அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம். ஒருமுறை ஏமாற்றம் அளித்தவர்களிடம் மீண்டும் எளிதில் நம்பிக்கை வைக்கக் கூடாது.
  4. பெற்றோர் தம் குழந்தைகளின் நலனுக்காக எச்சரிக்கையாக இருப்பதும், அவர்களின் பாதுகாப்பிற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் சிறந்த வழியாகும்.
  5. அல்லாஹ்வின் பாதுகாப்பும் கருணையும் மனிதர்களின் எந்த முயற்சியையும் விட மேலானவை என்பதை இந்த வசனம் நமக்குக் கற்பிக்கிறது.


📜 வசனம் 62-66 — சூரா யூசுப்

62وَقَالَ لِفِتْيَانِهِ اجْعَلُوا بِضَاعَتَهُمْ فِي رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَا إِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.
63فَلَمَّا رَجَعُوا إِلَىٰ أَبِيهِمْ قَالُوا يَا أَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَا أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்.
64قَالَ هَلْ آمَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَا أَمِنتُكُمْ عَلَىٰ أَخِيهِ مِن قَبْلُ ۖ فَاللَّهُ خَيْرٌ حَافِظًا ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ
அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.
65وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ ۖ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي ۖ هَٰذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ۖ وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ۖ ذَٰلِكَ كَيْلٌ يَسِيرٌ
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
66قَالَ لَنْ أُرْسِلَهُ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًا مِّنَ اللَّهِ لَتَأْتُنَّنِي بِهِ إِلَّا أَن يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّا آتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ
அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
யூசுப்குர்ஆன் பட்டியல்
111வசனம்
MeccanRevelation
64வசனம்

மொழிபெயர்ப்பு — யூசுப் 64

சூரா யூசுப் வசனம் 64 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று,…

சூரா வசனம் 64/111 — சூரா யூசுப் يوسف (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா யூசுப் கேள், சூரா யூசுப் மொழிபெயர்ப்பு, சூரா யூசுப் mp3, சூரா யூசுப் pdf. வசனம் 62–66. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers