அல்-அன்பியா · 83/112
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அன்பியா
۞ وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ۝٨٣
Wa Ayyooba iz naadaa Rabbahooo annee massaniyad durru wa Anta arhamur raahimeen
📖 தமிழில்
இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் "நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" என்று பிரார்த்தித் போது,

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்): இறைத்தூதர் அய்யூப் நபி.
  • அழ்ழுர்ர் (அழுத்தம்): நோய், துன்பம், இழப்பு போன்ற துன்பங்கள்.
  • அர்ஹமுர் ராஹிமீன்: அருள் செய்வோரில் மிக்க அருளாளன்.

விளக்கம்:

நபி அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கடுமையான நோயாலும், செல்வம், பிள்ளைகள், குடும்பம் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிக்கப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் நீண்ட காலம் பொறுமையுடன் இருந்து, இறைவனிடம் முறையிட்டு, "இறைவனே! என்னைத் துன்பம் தாக்கியுள்ளது. நீயோ அருள் செய்வோரில் மிக்க அருளாளன்" என்று பிரார்த்தித்தார்கள். அவர்களின் இந்த முறையீடு இறைவனிடம் மட்டுமே இருந்தது; மனிதர்களிடம் முறையிடவில்லை. அவர்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்று, அவர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு மீண்டும் செல்வத்தையும் சந்ததிகளையும் வழங்கினான்.

பயன்கள்:

  • துன்பங்கள் வந்தால் பொறுமையாக இருந்து இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டும்; மனிதர்களிடம் புலம்புவது தவறு.
  • இறைவன் மிக்க அருளாளன் என்பதால், அவனிடம் எப்போதும் நம்பிக்கையுடன் பிரார்த்திக்கலாம்.
  • துன்பம் வந்தால் அது நிரந்தரமல்ல; இறைவனின் கருணையால் நிவாரணம் கிடைக்கும் என்பதை உணர வேண்டும்.
  • நோயும் இழப்பும் ஏற்பட்டால், அவை பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்பதால் பொறுமை கடமையாகும்.


📜 வசனம் 81-85 — சூரா அல்-அன்பியா

81وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
82وَمِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
83۞ وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் "நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" என்று பிரார்த்தித் போது,
84فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِن ضُرٍّ ۖ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَابِدِينَ
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
85وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ ۖ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ
இன்னும்; இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
அல்-அன்பியாகுர்ஆன் பட்டியல்
112வசனம்
MeccanRevelation
83வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அன்பியா 83

சூரா அல்-அன்பியா வசனம் 83 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் "நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!)…

சூரா வசனம் 83/112 — சூரா அல்-அன்பியா الأنبياء (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அன்பியா கேள், சூரா அல்-அன்பியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-அன்பியா mp3, சூரா அல்-அன்பியா pdf. வசனம் 81–85. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers