Laqad sami`al laahu qawlal lazeena qaalooo innal laaha faqeerunw wa nahnu aghniyaaa`; sanaktubu maa qaaloo wa qatlahumul Ambiyaa`a bighairi haqqinw wa naqoolu zooqoo `azaaba Ihreeq
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹു ദരിദ്രനും നമ്മള് ധനികരുമാണ് എന്ന് പറഞ്ഞവരുടെ വാക്ക് അല്ലാഹു തീര്ച്ചയായും കേട്ടിട്ടുണ്ട്. അവര് ആ പറഞ്ഞതും അവര് പ്രവാചകന്മാരെ അന്യായമായി കൊലപ്പെടുത്തിയതും നാം രേഖപ്പെടുത്തി വെക്കുന്നതാണ്. കത്തിഎരിയുന്ന നരകശിക്ഷ ആസ്വദിച്ചു കൊള്ളുക എന്ന് നാം (അവരോട്) പറയുകയും ചെയ്യും.
யூதர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ் ஏழை; நாங்கள் செல்வந்தர்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ் தன் விசுவாசிகளிடம் கடன் கொடுக்குமாறு கேட்டதை (அல்குர்ஆன் 2:245) கேலி செய்து, அவர்கள் இப்படிப் பேசினார்கள். இந்த தூஷணையான வார்த்தைகளை அல்லாஹ் நன்கு செவியுற்றான்.
அவர்களின் இந்த பொய்யான கூற்றையும், அநியாயமாக இறைத்தூதர்களைக் கொலை செய்த அவர்களின் முற்கால முன்னோர்களின் செயல்களையும் அல்லாஹ் பதிவு செய்வான். மறுமை நாளில் அவர்கள் அனைவருக்கும் இதற்கான தண்டனை வழங்கப்படும். அவர்கள் நரகில் நுழையும் போது, "எரிக்கும் நெருப்பின் சுவையைச் சுவையுங்கள்" என்று அவர்களிடம் கூறப்படும்.
பயன்கள்:
அல்லாஹ்வின் மீது அவதூறு கூறுவது மிகப்பெரிய பாவம். அவனது தூய்மையான பெயரைக் குறைத்துப் பேசுபவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுகிறது.
அல்லாஹ் எல்லா செல்வங்களுக்கும் உரிமையாளன்; அவன் எதிலிருந்தும் தேவையற்றவன். அவன் நம்மிடம் கேட்பது நமது நன்மைக்காகவே, அவனுடைய தேவைக்காக அல்ல.
இறைத்தூதர்களை அவமதிப்பதும், அவர்களுக்கு எதிராகக் கை உயர்த்துவதும் கடுமையான தண்டனைக்குரிய செயல்கள். இது முந்தைய சமூகங்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது.
அல்லாஹ்வின் நீதி மிகத் துல்லியமானது; சிறிய செயல்களையும் அவன் பதிவு செய்து, அதற்கேற்ப கூலி அல்லது தண்டனை வழங்குவான்.
நம் வாயிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பு உண்டு. எனவே, நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்; அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் மரியாதையாக மட்டுமே பேச வேண்டும்.
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.