📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 582
சூரா அன்-நபா
bismillah
عَمَّ يَتَسَآءَلُونَ  ۝١ عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ  ۝٢ ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ  ۝٣ كـَلَّا سَيَعۡلَمُونَ  ۝٤ ثُمَّ كـَلَّا سَيَعۡلَمُونَ  ۝٥ أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدًا  ۝٦ وَٱلۡجِبَالَ أَوۡتَادًا  ۝٧ وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجًا  ۝٨ وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا  ۝٩ وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسًا  ۝١٠ وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشًا  ۝١١ وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا  ۝١٢ وَجَعَلۡنَا سِرَاجًا وَهَّاجًا  ۝١٣ وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءً ثَجَّاجًا  ۝١٤ لِّنُخۡرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا  ۝١٥ وَجَنَّٰتٍ أَلۡفَافًا  ۝١٦ إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتًا  ۝١٧ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجًا  ۝١٨ وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبًا  ۝١٩ وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا  ۝٢٠ إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا  ۝٢١ لِّلطَّٰغِينَ مَـَٔابًا  ۝٢٢ لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابًا  ۝٢٣ لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدًا وَلَا شَرَابًا  ۝٢٤ إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا  ۝٢٥ جَزَآءً وِفَاقًا  ۝٢٦ إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابًا  ۝٢٧ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابًا  ۝٢٨ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبًا  ۝٢٩ فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا  ۝٣٠
சூரா அன்-நபா
bismillah
78:1
عَمَّ يَتَسَآءَلُونَ  ۝١
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ  ۝٢
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ  ۝٣
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:4
كـَلَّا سَيَعۡلَمُونَ  ۝٤
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5
ثُمَّ كـَلَّا سَيَعۡلَمُونَ  ۝٥
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدًا  ۝٦
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7
وَٱلۡجِبَالَ أَوۡتَادًا  ۝٧
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجًا  ۝٨
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا  ۝٩
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسًا  ۝١٠
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشًا  ۝١١
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا  ۝١٢
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13
وَجَعَلۡنَا سِرَاجًا وَهَّاجًا  ۝١٣
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءً ثَجَّاجًا  ۝١٤
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15
لِّنُخۡرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا  ۝١٥
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16
وَجَنَّٰتٍ أَلۡفَافًا  ۝١٦
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتًا  ۝١٧
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجًا  ۝١٨
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبًا  ۝١٩
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:20
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا  ۝٢٠
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا  ۝٢١
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
78:22
لِّلطَّٰغِينَ مَـَٔابًا  ۝٢٢
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابًا  ۝٢٣
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدًا وَلَا شَرَابًا  ۝٢٤
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا  ۝٢٥
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:26
جَزَآءً وِفَاقًا  ۝٢٦
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:27
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابًا  ۝٢٧
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابًا  ۝٢٨
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبًا  ۝٢٩
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:30
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا  ۝٣٠
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).


📚Juz 30 📄582 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers