Man kaana yureedul hayaatad dunyaa zeenatahaa nuwaffi ilaihim a`maa lahum feehaa wa hum feehaa laa yubkhasoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ഐഹികജീവിതത്തെയും അതിന്റെ അലങ്കാരത്തെയുമാണ് ആരെങ്കിലും ഉദ്ദേശിക്കുന്നതെങ്കില് അവരുടെ പ്രവര്ത്തനങ്ങള് അവിടെ (ഇഹലോകത്ത്) വെച്ച് അവര്ക്ക് നാം നിറവേറ്റികൊടുക്കുന്നതാണ്. അവര്ക്കവിടെ യാതൊരു കുറവും വരുത്തപ്പെടുകയില്ല.
لَا يُبْخَسُونَ: அவர்களின் கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது.
விளக்கம்:
இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரங்களையும் மட்டுமே தம் நோக்கமாகக் கொண்டு, மறுமையின் நன்மையை விரும்பாமல், தம் நற்செயல்களை இவ்வுலக நலன்களுக்காகவே செய்பவர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை இவ்வுலகிலேயே முழுமையாக வழங்கிவிடுகிறான். அவர்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, வசதியான வாழ்க்கை, செல்வ வளம் போன்றவற்றை அளித்து, அவர்களின் உழைப்பில் எதையும் குறைக்காமல் முழுமையாகக் கொடுத்துவிடுகிறான். ஆனால், அவர்கள் மறுமையில் எந்தப் பங்கும் பெறமாட்டார்கள்; ஏனெனில் அவர்களின் நோக்கம் இவ்வுலகம் மட்டுமேயாக இருந்தது. அவர்கள் இவ்வுலகில் தங்கள் செயல்களின் பலனை முழுமையாகப் பெற்றுவிட்டதால், மறுமையில் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
பயன்கள்:
நம் செயல்களின் நோக்கம் தூய்மையாக இருக்க வேண்டும்; அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டும்.
இவ்வுலக நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் நற்செயல்கள் மறுமையில் பயனளிக்காது என்பதை இது நமக்கு எச்சரிக்கிறது.
அல்லாஹ் நீதியானவன்; ஒவ்வொருவருக்கும் அவர்களின் நோக்கத்திற்கேற்ப கூலி வழங்குகிறான். எனவே, நம் எண்ணங்களைத் திருத்தி, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடுபவர்களாக மாற வேண்டும்.
இவ்வுலக வாழ்க்கை அழிந்துபோகக்கூடியது; நிலையான மறுமை வாழ்க்கையே உண்மையான வெற்றியின் இடமாகும். எனவே, அழியக்கூடிய இவ்வுலகத்தை விட, நிலையான மறுமையின் நன்மைகளை நாடுவதே அறிவுடையோரின் செயலாகும்.
இஸ்லாம் மனிதனை உயர்ந்த இலட்சியங்களை நோக்கி அழைக்கிறது; இவ்வுலக இன்பங்களில் மூழ்கியிருப்பதை விட, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மறுமை வெற்றியையும் நாடுவதே சிறந்த வாழ்க்கை நெறியாகும்.
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்; "அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?" (என்று கூறவும்.)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன் அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்தித்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.