Wattakhaza qawmu Moosaa mim ba`dihee min huliyyihim `ijlan jasadal lahoo khuwaar; alam yaraw annahoo laa yukallimuhum wa laa yahdeehim sabeelaa; ittakha zoohu wa kaanoo zaalimeen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
മൂസായുടെ ജനത അദ്ദേഹം പോയതിനു ശേഷം അവരുടെ ആഭരണങ്ങള് കൊണ്ടുണ്ടാക്കിയ മുക്രയിടുന്ന ഒരു കാളക്കുട്ടിയുടെ സ്വരൂപത്തെ ദൈവമായി സ്വീകരിച്ചു. അതവരോട് സംസാരിക്കുകയില്ലെന്നും, അവര്ക്ക് വഴി കാണിക്കുകയില്ലെന്നും അവര് കണ്ടില്ലേ? അതിനെ അവര് (ദൈവമായി) സ്വീകരിക്കുകയും അതോടെ അവര് അക്രമികളാവുകയും ചെയ്തിരിക്കുന്നു.
حُلِيِّهِمْ (ஹுலிய்யிஹிம்): அவர்களின் நகைகள்/ஆபரணங்கள்.
عِجْلًا (இஜ்லன்): இளம் காளை (கன்று).
جَسَدًا (ஜசதன்): உயிரற்ற உடல்.
خُوَارٌ (குவார்): காளையின் சத்தம் (சப்தம்).
விளக்கம்:
மூசா (அலைஹிஸ்ஸலாம்) தம் இறைவனுடன் உரையாடச் சென்ற பின்னர், அவருடைய சமூகத்தினர் (பனூ இஸ்ராயீல்) தங்களிடமிருந்த தங்க நகைகளைக் கொண்டு ஓர் இளம் காளையின் சிலையைச் செய்தனர். அந்தச் சிலைக்கு உயிர் இல்லை; ஆனால் அதிலிருந்து காளையின் சப்தம் போன்ற ஒலி எழும்படி செய்யப்பட்டிருந்தது. இது அவர்களின் பெரும் தவறாகும்.
அவர்கள் அந்தச் சிலையைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அது அவர்களிடம் பேசவில்லை, அவர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, எந்தத் தீமையையும் நீக்கவில்லை, நல்ல பாதையைக் காட்டவும் இல்லை. இவ்வாறு அவர்கள் அறிவில்லாமல் செயல்பட்டு, தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். ஏனெனில், இறைவனை விட்டுவிட்டு உயிரற்ற ஒரு சிலையை வணங்குவது மிகப்பெரிய அநியாயமாகும்.
பயன்கள்:
இறைவனைத் தவிர வேறு எதையும் வணங்குவது மிகப்பெரிய அநியாயம் என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் கற்பிக்கிறது.
உயிரற்ற பொருட்களிடமிருந்து எந்த நன்மையும் எதிர்பார்க்கக்கூடாது; அவை பேசவும் மாட்டா, வழிகாட்டவும் மாட்டா.
மார்க்க விஷயங்களில் அறிவாளிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்; அறியாமையால் செய்யப்படும் செயல்கள் பெரும் தவறுகளுக்கு இட்டுச் செல்லும்.
இறைவனின் கட்டளைகளை மீறுவதும், அவனுக்கு இணை கற்பிப்பதும் மனிதனுக்கு இழப்பையே தரும்.
உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; அவனிடமே நாம் முழு மனதுடன் சரணடைய வேண்டும்.
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்; "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.