📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 592
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا  ۝١٦ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٌ وَأَبۡقَىٰٓ  ۝١٧ إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ  ۝١٨ صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ  ۝١٩
சூரா அல்-காஷியா
bismillah
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ  ۝١ وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ  ۝٢ عَامِلَةٌ نَّاصِبَةٌ  ۝٣ تَصۡلَىٰ نَارًا حَامِيَةً  ۝٤ تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ  ۝٥ لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ  ۝٦ لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ  ۝٧ وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ  ۝٨ لِّسَعۡيِهَا رَاضِيَةٌ  ۝٩ فِي جَنَّةٍ عَالِيَةٍ  ۝١٠ لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً  ۝١١ فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ  ۝١٢ فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ  ۝١٣ وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ  ۝١٤ وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ  ۝١٥ وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ  ۝١٦ أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ  ۝١٧ وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ  ۝١٨ وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ  ۝١٩ وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ  ۝٢٠ فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ  ۝٢١ لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ  ۝٢٢ إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ  ۝٢٣ فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ  ۝٢٤ إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ  ۝٢٥ ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم  ۝٢٦
87:16
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا  ۝١٦
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:17
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٌ وَأَبۡقَىٰٓ  ۝١٧
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ  ۝١٨
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ  ۝١٩
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
சூரா அல்-காஷியா
bismillah
88:1
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ  ۝١
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:2
وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ  ۝٢
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:3
عَامِلَةٌ نَّاصِبَةٌ  ۝٣
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:4
تَصۡلَىٰ نَارًا حَامِيَةً  ۝٤
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:5
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ  ۝٥
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
88:6
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ  ۝٦
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:7
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ  ۝٧
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
88:8
وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ  ۝٨
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:9
لِّسَعۡيِهَا رَاضِيَةٌ  ۝٩
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:10
فِي جَنَّةٍ عَالِيَةٍ  ۝١٠
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:11
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً  ۝١١
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:12
فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ  ۝١٢
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:13
فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ  ۝١٣
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:14
وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ  ۝١٤
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:15
وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ  ۝١٥
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:16
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ  ۝١٦
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ  ۝١٧
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ  ۝١٨
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ  ۝١٩
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ  ۝٢٠
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:21
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ  ۝٢١
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
88:22
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ  ۝٢٢
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ  ۝٢٣
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
88:24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ  ۝٢٤
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:25
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ  ۝٢٥
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
88:26
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم  ۝٢٦
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.


📚Juz 30 📄592 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers