அல்-பகரா · 62/286
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-பகரா
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ۝٦٢
Innal lazeena aamanoo wallazeena haadoo wan nasaaraa was Saabi`eena man aamana billaahi wal yawmil aakhiri wa `amila saalihan falahum ajruhum `inda Rabbihim wa laa khawfun `alaihim wa laa hum yahzanoon
📖 தமிழில்
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • ஹாதூ (هَادُوا): யூதர்கள். 'ஹூத்' என்றால் மீளுதல் அல்லது திரும்புதல். அவர்கள் தவறு செய்தபோது மீள்பவர்களாக இருந்ததால் இப்பெயர் பெற்றனர்.
  • நஸாரா (النَّصَارَى): கிறிஸ்தவர்கள். நஸ்ரா (நஸ்ரத்) ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லது உதவி செய்தவர்கள் என்ற பொருளில் இயேசு (அலை) அவர்களுக்கு உதவியவர்கள்.
  • ஸாபிஈன் (الصَّابِئِينَ): 'ஸப்அ' என்றால் வெளியேறுதல். ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு வெளியேறுபவர்கள். இவர்களில் இரு வகையினர்: (1) இணைவைப்பாளர்கள், (2) ஏகத்துவவாதிகள். இங்கு நோக்கம் ஏகத்துவவாதிகளான ஸாபிஈன்கள்.

விளக்கம்:

இந்தப் புனித வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்: இந்த உம்மத்தில் உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள், அத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுத்துவத்திற்கு முன்னர் வாழ்ந்த முந்தைய சமுதாயங்களில் — யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபிஈன்கள் (ஏகத்துவவாதிகள்) — எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் உண்மையான, தூய்மையான நம்பிக்கை கொண்டு, நல்லறங்களைச் செய்தார்களோ, அவர்கள் அனைவருக்கும் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமான கூலி உண்டு. அவர்களுக்கு மறுமையில் எந்த அச்சமும் இல்லை; உலக வாழ்க்கையில் இழந்தவற்றுக்காக அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

ஆனால், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட பிறகு, அல்லாஹ் வேறு எந்த மதத்தையும் ஏற்கமாட்டான். இனி ஏற்கப்படும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. எனவே, தூதுத்துவத்திற்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்காமல் இருப்பவர்கள் இந்த வாக்குறுதியில் அடங்கமாட்டார்கள்.


பயன்கள்:

  1. அல்லாஹ்வின் கருணை மகத்தானது — முந்தைய சமுதாயங்களில் நல்லவர்களாக இருந்தவர்களுக்கும் அவன் நன்மையை வழங்குகிறான்.
  2. உண்மையான நம்பிக்கை (ஈமான்) என்பது வெறும் வாய்ச்சொல் அல்ல; அது இதயத்தில் உறுதியாகி, நாவால் உறுதிப்படுத்தப்பட்டு, உடலால் நல்லறங்களில் வெளிப்பட வேண்டும்.
  3. அச்சமும் கவலையும் இல்லாத வாழ்க்கை என்பது அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை வைத்து நல்லறம் செய்பவர்களுக்கே கிடைக்கும்.
  4. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் ஏற்கப்படாது என்பதால், இஸ்லாத்தை ஏற்று வாழ்வது மட்டுமே வெற்றிக்கான ஒரே வழி என்பதை உணர வேண்டும்.
  5. மார்க்க விஷயத்தில் நேர்மையும், தூய்மையும் மிக முக்கியம் — வெளித்தோற்றத்திற்காக மட்டும் செய்யும் வணக்கங்கள் பயனளிக்காது.


📜 வசனம் 60-64 — சூரா அல்-பகரா

60۞ وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ ۖ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
61وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ ۚ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ
இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
62إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
63وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُم بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
64ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَٰلِكَ ۖ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
அல்-பகராகுர்ஆன் பட்டியல்
286வசனம்
MedinanRevelation
62வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-பகரா 62

சூரா அல்-பகரா வசனம் 62 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி…

சூரா வசனம் 62/286 — சூரா அல்-பகரா البقرة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-பகரா கேள், சூரா அல்-பகரா மொழிபெயர்ப்பு, சூரா அல்-பகரா mp3, சூரா அல்-பகரா pdf. வசனம் 60–64. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, September 8, 2026

Don't forget us in your sincere prayers