Man kaana yureedul `izzata falillaahil `izzatu jamee`aa; ilaihi yas`adul kalimut taiyibu wal`amalus saalihu yarfa`uh; wallazeena yamkuroonas sayyiaati lahum `azaabun shadeed; wa makru ulaaa`ika huwa yaboor
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ആരെങ്കിലും പ്രതാപം ആഗ്രഹിക്കുന്നുവെങ്കില് പ്രതാപമെല്ലാം അല്ലാഹുവിന്റെ അധീനത്തിലാകുന്നു. അവങ്കലേക്കാണ് ഉത്തമ വചനങ്ങള് കയറിപോകുന്നത്. നല്ല പ്രവര്ത്തനത്തെ അവന് ഉയര്ത്തുകയും ചെയ്യുന്നു. ദുഷിച്ച തന്ത്രങ്ങള് പ്രയോഗിക്കുന്നതാരോ അവര്ക്ക് കഠിനശിക്ഷയുണ്ട്. അത്തരക്കാരുടെ തന്ത്രം നാശമടയുക തന്നെ ചെയ്യും.
الكَلِمُ الطَّيِّبُ: தூய்மையான சொற்கள் - அதாவது தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்), தஸ்பீஹ், தஹ்மீத் போன்ற திக்ருகள்.
يَبُورُ: அழிந்து வீணாகிவிடும், பலனற்றதாகிவிடும்.
விளக்கம்:
யார் கண்ணியத்தையும் மேன்மையையும் விரும்புகிறாரோ அவர் அதனை அல்லாஹ்விடமிருந்தே தேட வேண்டும். ஏனெனில் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. இவ்வுலகிலோ மறுமையிலோ எந்தக் கண்ணியமும் அவனைத் தவிர வேறு யாரிடமிருந்தும் கிடைக்காது. படைப்பினங்களிடம் கண்ணியத்தைத் தேடுபவர் இழிவடைவார்; படைப்பாளனிடம் தேடுபவரோ உண்மையான கண்ணியத்தைப் பெறுவார்.
அல்லாஹ்விடம் சென்றடைவது தூய்மையான சொற்களே - அவை திக்ர், தஸ்பீஹ், தஹ்லீல் போன்றவை. ஆனால் இந்த நல்ல சொற்கள் மேலே செல்ல, அவற்றுடன் நல்ல அமல்கள் துணை நிற்க வேண்டும். அதாவது, நல்ல சொல்லை நல்ல செயல் உயர்த்துகிறது. வாயளவில் சொல்வது மட்டும் போதாது; அதை உறுதிப்படுத்தும் வண்ணம் நடைமுறையில் நல்ல செயல்கள் இருக்க வேண்டும். நல்ல செயல்களே நல்ல சொற்களை மேலே ஏற்றிச் செல்கின்றன.
எவர்கள் தீய சூழ்ச்சிகளைச் செய்கிறார்களோ - இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராகச் சதி செய்த இணைவைப்பாளர்களைப் போன்று - அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களுடைய சூழ்ச்சிகள் அழிந்து வீணாகிவிடும்; அவர்களுக்கு எந்தப் பலனையும் தராது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதருக்கு எதிரான சூழ்ச்சி ஒருபோதும் வெற்றிபெறாது.
பயன்கள்:
கண்ணியத்தை அடைய ஒரே வழி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதே. அவனைத் தவிர வேறு யாரிடமும் உண்மையான கண்ணியத்தைத் தேடக்கூடாது.
நல்ல சொற்கள் மட்டும் போதாது; அவற்றுடன் நல்ல செயல்களும் இணைய வேண்டும். வாயால் சொல்வதும் செயலால் நிறைவேற்றுவதும் இணைந்தால்தான் அது அல்லாஹ்விடம் ஏற்கப்படும்.
தீய சூழ்ச்சிகள் எவ்வளவு தந்திரமாக இருந்தாலும் அவை அழிந்தே தீரும். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராகச் சதி செய்பவர்கள் இறுதியில் தோல்வியடைவார்கள்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதல் - எத்தகைய எதிரிகள் வந்தாலும், அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்வால் சிதறடிக்கப்படும்.
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீராக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.