Wa qeela yaaa ardubla`ee maaa`aki wa yaa samaaa`u aqi`ee wa gheedal maaa`u wa qudiyal amru wastawat `alal joodiyyi wa qeela bu`dal lilqawmiz zaalimeen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ഭൂമീ! നിന്റെ വെള്ളം നീ വിഴുങ്ങൂ. ആകാശമേ! മഴ നിര്ത്തൂ! എന്ന് കല്പന നല്കപ്പെട്ടു. വെള്ളം വറ്റുകയും ഉത്തരവ് നിറവേറ്റപ്പെടുകയും ചെയ്തു. അത് (കപ്പല്) ജൂദി പര്വ്വതത്തിന് മേല് ഉറച്ചുനില്ക്കുകയും ചെയ്തു. അക്രമികളായ ജനതയ്ക്ക് നാശം എന്ന് പറയപ്പെടുകയും ചെയ്തു.
الْجُودِيِّ – ஜூதி மலை (கப்பல் தங்கிய மலையின் பெயர்)
بُعْدًا – தொலைவு, அழிவு (இங்கே சாபமாகவும் அழிவாகவும் பொருள்)
விளக்கம்:
நூஹ் நபியின் சமூகத்தினர் அழிவுக்குப் பிறகு, வெள்ளப்பெருக்கு முடிவுக்கு வந்தது. அல்லாஹ் பூமியை நோக்கி, "பூமியே! உன்னிடமிருந்து பொங்கி வந்த நீரை நீ உறிஞ்சிக்கொள்" என்றும், வானத்தை நோக்கி, "வானமே! மழையைப் பொழிவதை நிறுத்திக்கொள்" என்றும் கட்டளையிட்டான். அப்போது நீர் குறைந்து வற்றியது. நூஹ் நபியின் சமூகத்தில் இறைநம்பிக்கை கொள்ளாதவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு, அல்லாஹ்வின் கட்டளை நிறைவேறியது. கப்பல் ஜூதி மலைமீது நிலைத்து நின்றது. அப்போது அல்லாஹ்வின் கட்டளையால், அநியாயக்காரர்களான அந்த மக்களுக்கு அழிவும் தொலைவும் உண்டாகட்டும் என்று கூறப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி, அவனை நம்ப மறுத்ததால் இந்த தண்டனை அவர்களுக்கு ஏற்பட்டது.
பயன்கள்:
அல்லாஹ்வின் கட்டளை நிறைவேறாமல் எதுவும் நடக்காது; அவன் சொன்னால் போதும், எல்லாம் நடந்தேறும் என்பதை இது உணர்த்துகிறது.
அநியாயம் செய்பவர்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இது நினைவூட்டுகிறது.
நல்லவர்களுக்கு அல்லாஹ் எப்போதும் பாதுகாப்பளிக்கிறான்; நூஹ் நபியும் அவரை நம்பியவர்களும் கப்பலில் பாதுகாக்கப்பட்டது போல, இறைநம்பிக்கையாளர்கள் எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வின் உதவியைப் பெறுவார்கள்.
இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறது; பூமியும் வானமும் அவன் சொன்னபடி செயல்படுகின்றன. எனவே, மனிதர்கள் தாங்கள் படைக்கப்பட்ட நோக்கத்திற்கேற்ப அல்லாஹ்வுக்கு வழிபட வேண்டும்.
அழிவுக்குப் பிறகு புதிய வாழ்க்கை தொடங்குகிறது; இது மறுமை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார்.
அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான்.
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
நூஹ் தன் இறைவனிடம் "என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.
அ(தற்கு இறை)வன் கூறினான்; "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.