மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹു സത്യപ്രകാരം തീര്പ്പുകല്പിക്കുന്നു. അവന്ന് പുറമെ അവര് വിളിച്ച് പ്രാര്ത്ഥിക്കുന്നവരാകട്ടെ യാതൊന്നിലും തീര്പ്പുകല്പിക്കുകയില്ല. തീര്ച്ചയായും അല്ലാഹു തന്നെയാകുന്നു എല്ലാം കേള്ക്കുന്നവനും കണ്ടറിയുന്നവനും.
அல்லாஹ் தனது அடியார்களுக்கிடையே முழு நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவன் எந்த ஒருவருக்கும் அநீதி இழைப்பதில்லை. ஒருவரின் நன்மைகளைக் குறைப்பதுமில்லை, தீமைகளை அதிகரிப்பதுமில்லை. அவன் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப முழுமையான பிரதிபலனை வழங்குகிறான்.
ஆனால், இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வையன்றி வணங்கும் தெய்வங்களோ (சிலைகளோ, பொய்யான தெய்வங்களோ) எந்த ஒரு விஷயத்திலும் தீர்ப்பளிக்கும் சக்தியற்றவை. அவைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவைகள் செவியுறுவதுமில்லை, பார்ப்பதுமில்லை, பேசுவதுமில்லை. எனவே அவைகள் எப்படி தீர்ப்பளிக்க முடியும்?
நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களின் அனைத்து பேச்சுக்களையும் செவியுறுகிறான். அவர்களின் உள்ளக்கிடக்கைகளையும், செயல்களையும் நன்கு அறிந்தவன். அவர்களின் இரகசியங்களும், வெளிப்படையான விஷயங்களும் அவனுக்கு மறைவானவை அல்ல. அவன் அனைத்தையும் அறிந்து, அதற்கேற்ப மறுமையில் கணக்குக் கேட்டு நியாயமான தீர்ப்பளிப்பான்.
பயன்கள்:
அல்லாஹ்வின் நீதி முழுமையானது; அவன் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. இது முஃமின்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் அனைத்தும் சக்தியற்றவை; அவற்றை வணங்குவது முற்றிலும் வீணான செயல் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருப்பதால், நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும் அவனுக்குத் தெரியும்; அதற்கான பிரதிபலனை நிச்சயம் பெறுவோம். தீய செயல்களும் அவனுக்கு மறைவாக இல்லை; அவற்றுக்கும் தக்க தண்டனை உண்டு.
இந்த வசனம் நமக்கு நல்லொழுக்கத்தையும், இறைவனைப் பயந்து நடக்கும் தன்மையையும் ஏற்படுத்துகிறது; ஏனெனில் நம் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.