📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 585
சூரா அபஸ
bismillah
عَبَسَ وَتَوَلَّىٰٓ  ۝١ أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ  ۝٢ وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ  ۝٣ أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ  ۝٤ أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ  ۝٥ فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ  ۝٦ وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ  ۝٧ وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ  ۝٨ وَهُوَ يَخۡشَىٰ  ۝٩ فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ  ۝١٠ كـَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٌ  ۝١١ فَمَن شَآءَ ذَكَرَهُۥ  ۝١٢ فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ  ۝١٣ مَّرۡفُوعَةٍ مُّطَهَّرَةِۭ  ۝١٤ بِأَيۡدِي سَفَرَةٍ  ۝١٥ كِرَامِۭ بَرَرَةٍ  ۝١٦ قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ  ۝١٧ مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ  ۝١٨ مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ  ۝١٩ ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ  ۝٢٠ ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ  ۝٢١ ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ  ۝٢٢ كـَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ  ۝٢٣ فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ  ۝٢٤ أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبًّا  ۝٢٥ ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقًّا  ۝٢٦ فَأَنۢبَتۡنَا فِيهَا حَبًّا  ۝٢٧ وَعِنَبًا وَقَضۡبًا  ۝٢٨ وَزَيۡتُونًا وَنَخۡلًا  ۝٢٩ وَحَدَآئِقَ غُلۡبًا  ۝٣٠ وَفَٰكِهَةً وَأَبًّا  ۝٣١ مَّتَٰعًا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ  ۝٣٢ فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ  ۝٣٣ يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ  ۝٣٤ وَأُمِّهِۦ وَأَبِيهِ  ۝٣٥ وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ  ۝٣٦ لِكُلِّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ يَوۡمَئِذٍ شَأۡنٌ يُغۡنِيهِ  ۝٣٧ وُجُوهٌ يَوۡمَئِذٍ مُّسۡفِرَةٌ  ۝٣٨ ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ  ۝٣٩ وَوُجُوهٌ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٌ  ۝٤٠ تَرۡهَقُهَا قَتَرَةٌ  ۝٤١ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ  ۝٤٢
சூரா அபஸ
bismillah
80:1
عَبَسَ وَتَوَلَّىٰٓ  ۝١
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ  ۝٢
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ  ۝٣
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ  ۝٤
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
80:5
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ  ۝٥
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ  ۝٦
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ  ۝٧
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ  ۝٨
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9
وَهُوَ يَخۡشَىٰ  ۝٩
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ  ۝١٠
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11
كـَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٌ  ۝١١
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ  ۝١٢
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ  ۝١٣
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14
مَّرۡفُوعَةٍ مُّطَهَّرَةِۭ  ۝١٤
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15
بِأَيۡدِي سَفَرَةٍ  ۝١٥
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16
كِرَامِۭ بَرَرَةٍ  ۝١٦
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ  ۝١٧
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ  ۝١٨
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ  ۝١٩
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ  ۝٢٠
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ  ۝٢١
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
80:22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ  ۝٢٢
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23
كـَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ  ۝٢٣
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ  ۝٢٤
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبًّا  ۝٢٥
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقًّا  ۝٢٦
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبًّا  ۝٢٧
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28
وَعِنَبًا وَقَضۡبًا  ۝٢٨
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29
وَزَيۡتُونًا وَنَخۡلًا  ۝٢٩
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:30
وَحَدَآئِقَ غُلۡبًا  ۝٣٠
அடர்ந்த தோட்டங்களையும்,
80:31
وَفَٰكِهَةً وَأَبًّا  ۝٣١
பழங்களையும், தீவனங்களையும்-
80:32
مَّتَٰعًا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ  ۝٣٢
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ  ۝٣٣
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ  ۝٣٤
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35
وَأُمِّهِۦ وَأَبِيهِ  ۝٣٥
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ  ۝٣٦
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37
لِكُلِّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ يَوۡمَئِذٍ شَأۡنٌ يُغۡنِيهِ  ۝٣٧
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38
وُجُوهٌ يَوۡمَئِذٍ مُّسۡفِرَةٌ  ۝٣٨
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:39
ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ  ۝٣٩
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40
وَوُجُوهٌ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٌ  ۝٤٠
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41
تَرۡهَقُهَا قَتَرَةٌ  ۝٤١
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ  ۝٤٢
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.


📚Juz 30 📄585 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers