அன்-நாஸியாத் சூரா அரபி மற்றும் தமிழ்
அன்-நாஸியாத் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (46 வசனம் — مكية). அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf.அன்-நாஸியாத் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
وَالنَّازِعَاتِ غَرْقًا ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
وَالنَّاشِطَاتِ نَشْطًا ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَالسَّابِحَاتِ سَبْحًا ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالسَّابِقَاتِ سَبْقًا ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
تَتْبَعُهَا الرَّادِفَةُ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
أَبْصَارُهَا خَاشِعَةٌ ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ١٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 13
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
فَإِذَا هُم بِالسَّاهِرَةِ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ ١٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 15
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى ١٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 16
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ ١٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 18
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ ٢٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 20
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ٢٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 22
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
فَحَشَرَ فَنَادَىٰ ٢٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 23
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ ٢٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 24
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ ٢٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 25
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ ٢٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 26
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا ٢٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 27
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا ٢٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 28
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا ٢٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 29
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا ٣٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 30
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا ٣١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 31
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ ٣٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 33
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ ٣٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 34
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ ٣٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 35
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 36
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ ٣٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 39
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ ٤٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 40
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ ٤١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 41
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ٤٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 42
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا ٤٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 43
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا ٤٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 44
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا ٤٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 45
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا ٤٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 46
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
படிக்க அன்-நாஸியாத் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

