அல்-முர்ஸலாத் சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-முர்ஸலாத் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (50 வசனம் — مكية). அல்-முர்ஸலாத் கேள், அல்-முர்ஸலாத் மொழிபெயர்ப்பு, அல்-முர்ஸலாத் mp3, அல்-முர்ஸலாத் pdf.அல்-முர்ஸலாத் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
وَالْمُرْسَلَاتِ عُرْفًا ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
فَالْعَاصِفَاتِ عَصْفًا ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَالنَّاشِرَاتِ نَشْرًا ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَالْفَارِقَاتِ فَرْقًا ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
عُذْرًا أَوْ نُذْرًا ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 15
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ١٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 16
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ ١٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 18
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ ٢٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 20
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ ٢١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 21
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ ٢٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 23
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 24
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ٢٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 25
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
أَحْيَاءً وَأَمْوَاتًا ٢٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 26
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا ٢٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 27
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 28
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ ٢٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 29
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ٣٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 30
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ ٣١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 31
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ ٣٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 32
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ ٣٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 33
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 34
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ٣٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 36
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 37
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ ٣٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 38
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ٣٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 39
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 40
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ ٤١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 41
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ ٤٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 42
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ٤٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 43
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ٤٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 44
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 45
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ٤٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 46
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 47
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ٤٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 48
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 49
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ ٥٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 50
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
படிக்க அல்-முர்ஸலாத் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

